"ஏண்டி! ஒரு மாதிரியா இருக்கே”
'ஒண்ணுமில்லே”
"எங்கிட்டே மறைக்கிறே. பட்டப்பா உங்கிட்டே ஆசையா இருக்கானோல்லியோ?"
அவள் மௌனமாக இருந்தாள். பாலு படுக்கையில் படுத்தப்படி பேப்பர் படித்துக்கொண்டிருந்தான்.
"சொல்லேண்டி... ரொம்ப இளைச்சுப்போயிட்டே"
* போனாப்போறேன். எப்படியோ இந்த உலகத்திலேருந்து போனாச்சரி...
"சீ...சீ...வாயப்பாரு...எங்கிட்டே செல்லேண்டி "
"ஒரு ஆசையுமில்லை,ஒரு மண்ணுமில்லை. கல்லுக்காவது கசிவுஇருக்கும். ஈரம்இருக்கும். இந்த மனுஷன் ஒண்ணும் பிரயோஜனமில்லை."
பாலு தூங்குவதுபோல இருந்தான்.
" அடடா! காட்டிலே காய்கிற நிலாதான்.. அதான் இந்தப்பொண் வாடி வதங்கிப்போயிருக்கு" என்று நினைக்துக் கொண்டான்.
பூரணி திடுக்கிட்டுபோய் உட்கார்ந்திருந்தாள். கள்தான் பல விதங்களிலும் கோளாறுகள் உள்ளவர்கள் என்று தீர்மானித்து இந்தச்சமூகம் அவர்களையே ஏசிக்கொண் டிருக்கிறதே. ஆண்களின் சரீர அமைப்பிலும் எத்தனையே கோளாறுகள் இருக்கக்கூடும் என்பதை வைத்தியர்கள் தவிர மற்றவர்கள் தெரிந்து கொள்வதுமில்லை. அதைப் பற்றி சந்தேகப்படுவதுகூடஇல்லை.