கொஞ்சநேரம் அங்கே மௌனம் நிலவியது.
"நான் போயிட்டு வரேன்" என்றபடி நர்மதாகிளம்பினாள்
பாலு அரைக் கண்களால் அவளை முழுமையாகப் பார்த் தான். நன்றாகப் பார்த்தான்.
பூரணிக்கு திகைப்பு அடங்கவே சிறிதுநேரம் பிடித்தது. ரொம்பவும் முன்னேறி விட்டோம். விமன்ஸ் லிப்" என் றெல்லாம் வாய் கிழிய பேசும் இந்த நாட்களில்கூட படித்த பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் என்றால் பூம் பூம் மாடு கள் மாதிரி பிள்ளைவீட்டார் கேட்கிற அசட்டுக் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு, பாடத்தெரியாவிட்டாலும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கோ ஒன்றிரண்டு பெண் சுளுக்குத்தான் துணிச்சல் இருக்கிறது. பாடத்தெரியாது என்று சொல்கிறார்கள்.
நர்மதா பட்டப்பாவிடம் என்ன கேள்விகள் கேட்டிருக்கப்போகிறாள்?
நன்றாக மூன்று வேளைகள் சாப்பிட, விதவிதமான துணி சுட்ட நகைகள் பூட்டிக்கொள்ள வசதியான குடும்பம். பையன் வெளித்தோற்றத்தில் பெண்மைகலந்த ஆணாக இருந் தான். ஆண்மை கலந்த பெண்கள் இல்லையா என்ன? அட் டமும் சட்டமுமாய் உயரமாய் எத்தனை பெண்கள் ஆண்களை மிஞ்சிய ஆண் தோற்றத்துடன் இல்லை. அப்படி ஆணும் பெண்களைப்போல இருக்கிறான்.
இனிமேல் இந்தப் பொண்ணுக்கு விடிவு காலம் ஏற்படப் போறதா? எப்படி? இவனை விட்டு விட்டு ஓடிப்போவதா? வாழா வெட்டியாகப் பிறந்த வீட்டுக்குப் போய்விடுவதா? அங்கே என்ன கொட்டி வைத்திருக்கிறது? கழுத்திலே தாலியும், காலிலேமெட்டியும் குலுங்கினால்கூட அந்தப்பெண் வேறு இடத்தில் ஓதுங்கினால் 'சைட்' அடிக்கிற காலம் இது.
ராமராஜ்யமா பாழாய் போகிறது?
பூபாணி குலுங்கி அழுதாள். பல விதங்களில் வெள்ளைக் காரர்கள் தேவலை. உண்டு இல்லை என்று கத்தரித்துக்கொள் வார்கள். இங்கே தர்மம் என்று ஒன்று இருக்கிறது. அதுவும்