'பிரச்னையும் கூடவே தம்பியோடப் புறப்பட்டு வந்திருக்கு 1 வந்து பாரேன்."
“ஏன் அப்படிச் சொல்றே ? அவன் பிரச்னையில் வீணாக நீ தலையிட்டு அதிகாரம் பண்ணாதே." -
“தலையிடறதோ அதிகாரம் பண்றதோ எனக்குப் பழக்கமில்லே தேசிகாமணி !”
"சரி. நேரே வந்து தம்பிகிட்டப் பேசிக்கிறேன், நீ."
சர்மா விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப் பட்டார். இறைமுடிமணியிடம் சீமாவையரைப் பற்றிக் கேள்விப்பட்ட சம்பவம் போலப் பல சம்பவங்கள் பல புகார்கள் பல இடங்களிலிருந்து ட ல முறை அவர் காதுக்கு எட்டியிருந்தன. தேக்கு மரத்தில் செதுக்கிய சிலை போல் கவர்ச்சியாயிருந்த அந்தப் பெண் மலர்க் கொடியிடம் சீமாவையர் தப்பாக நடந்து கொண்டிருப் பாரா இல்லையா என்று சர்மா ஒரு சிறிதும் சந்தேகப் படவே இல்லை. சீமாவையர் போன்ற கோவில் காளை பேய்வதை ஒத்த தான்தோன்றித் தனமான மேய்ச்சல் குணமும் திமிருமுள்ளவர்கள் சிலரை அவர் அறிவார். அவர்களால் கிராமத்தின் பெயரே கெட்டுக் கொண்டிருந்தது. சில இடங்களில் அவமானப்பட்ட பின்பும் அவர்களுக்குப் புத்தி வந்ததாகத் தெரியவில்லை. இம்மாதிரிக் காரணங்களால் தான் மடத்துப் பொறுப்புக் கள் சீமாவையரிடமிருந்து விரைந்து பறிக்கப்பட்டன. ஆனால் சீமாவையரோ தான் தவறுகள் செய்ததால் தான் அந்தப் பொறுப்புக்கள் தன்னிடமிருந்து பறிக்கப் பட்டன என்று உணர்ந்ததாகத் தெரியவில்லை. தனக்கு எதிராக விசுவேசுவர சர்மா சதி பண்ணி மடத்து நிர்வாகத்தைச் சரிக்கட்டி அவர்கள் தயவில் அதை அடைந்திருப்பதாகவே கற்பனை செய்து கொண்டிருந்தார்.
“மனிதன் சில வேளைகளில் காமுகனாகவும் இருக்க லாம். ஆனால் எல்லா வேளைகளிலும் காமுகனாகவே திரியும் ஒரு மிருகம் எப்படி மனிதனா இருக்க முடியும் ?” என்று பொருள்படும் ஒரு பழைய நீதி ஸ்லோகம் உண்டு இப்போது அது சர்மாவுக்கு நினைவு வந்தது. சீமாவையர் போன்றவர்கள் மேல் த ட் டுக் களி ல் தோன்றினால் அவர்களைத் திருத்த இறைமுடிமணி களும் தோன்றத்தான் வேண்டும் என்று இப்போது சர்மாவே கோபமாக நினைத்தார். கோவில் காளைகளை யாராவது பிடித்துப் பவுண் டி ல் அடைக்கத்தான் வேண்டும் என்றும் தோன்றியது.