(Reading time: 15 - 29 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

  

பொதுவாக சர்மா விளக்கு வைத்த பின் சமைத்த பண்டம் எதுவும் சாப்பிடுவது இல்லை. கறந்த பசுவின் பாலும் இரண்டு வாழைப் பழமுமே அவரது இரவு உணவு, வீடு சென்று அந்த "இரவு உணவை முடித்துக் கொண்டு குத்தகைதாரர் கூட்டம் நடக்க இருந்த பூரீ மடத்தின் "விவாக மண்டபம்' கட்டிடத்துக்குப் புறப்பட்டார் அவர். கடிதங்களையும் மட்த்துக்குக்குக் குத்தகை விவரங்களடங்கிய பெரிய பைண்டு நோட்டுப் புத்தகம் கையில் போட்டுக் கையில் எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

  

போகிற வழியில் வேணுமாமாவின் வீட்டிலிருந்த கலகலப்பையும் விளக்கொளி அலங்காரத்தையும், வாசலில் நின்ற கார்களையும் பார்த்தால் விருந்து முடிந்து ரவியும் கமலி முதலியவர்களும் வீடு திரும்ப இரவு பதினொரு மணிக்கு மேலேகூட ஆகலாம் என்று தோன்றியது.

  

ஸ்ரீமடம் கல்யாண மண்டபத்திற்கு அருகே தெருவில் திரும்பி அவர் செல்லும் திசைக்கு எதிர்த் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு விவசாயி மேலாடையை இடுப்புக்கு இறக்கியபடி, பணிவாக, “சாமி, குத்தகைக் கூட்டம் இன்னிக்கு இல்லேன்னாங்களே….. பெறவு எண்ணைக்கு வரணும்” என்று வினவினான்.

  

யார் சொன்னா அப்படி, கூட்டம் இன்னிக்குத் தான் நடக்கப் போவுது, வா” என்றார் அவர்.

  

சீமாவையரும் அவரு ஆளுங்களும் இன்னிக்கு இல்லேன்னு சொன்னாங்களே, சாமி”

  

“ நீ பேசாம எங்கூட வா சொல்றேன்” சர்மா அந்த விவசாயி பின் தொடரக் கல்யாணமண்டபத்துக்குள் நுழைந்தார். வழக்கமாக்க் குத்தகைக் கூட்ட்த்துக்கு வரும் திரளான் விவசாயிகள் யாரையும் அப்போது அங்கே காணவில்லை. கல்யாணக் கூட்த்தில் சீமாவையரும் அவருடைய கையாட்களாகிய நாலைந்து விவசாயிகளும் நடுவாவ அமர்ந்திருந்தனர்.

  

சற்றுப்புறத்துப் பதினெட்டுக் கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் வந்து ஆர்வத்தோடு குத்தகை கேட்கும் வளமான மடத்து நிலங்களைக் கேட்க அன்று யாருமே வரவில்லை என்பது மிகவும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.