(Reading time: 5 - 9 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

மாத : ஸோமேசனையும், ஆலிங்கனம் செய்து கொண்டு அப்பா ஸோமேசா! மெச்சினேன்! உன்னைப் போல ஆபத்தில் உதவும் நண்பன் கிடைப்பானோ? உன்னைப் பெற்ற எனக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்!

   

கோம : ஸ்வாமீ! நமஸ்காரம். (காலில் விழுகிறாள்)

   

மாத : கோமளா! எழுந்திரம்மா! (அவள் தோள் மேல் கை வைக்கிறார்) நான் உயிருடன் திரும்பி வராவிட்டால் என் பேரில் பிரியம் வைத்த இத்தனை பேர்களின் நிலைமை என்ன ஆகுமோ! ஈசுவரன் சர்வேக்ஞன் அல்லவா; நல்லது கெட்டது அவனுக்குத் தெரியாதா?

   

கோகி : (வஸந்ஸேனையைப் பார்த்து) வஸந்தஸேனா! பிரிய சகோதரி! நீ வந்திருப்பதை நான் பார்க்கவில்லை! ஆகா! உயிருடன் திரும்பி வந்தாயே! உன் பேரழகைத் திரும்பவும் நான் பார்க்கப் போகிறேனா என்றல்லவோ ஏங்கி இருந்தேன்.

   

(இருவரும் ஆலிங்கனம் செய்து கொள்ளுகிறார்கள்)

   

கோகி : வஸந்தஸேனா! உன்னுடைய விருப்பம் இன்னது என்பதை நான் நன்றாய் அறிவேன். அன்றிரவு உனக்கும் என் கணவருக்கும் நடந்த சம்பாஷணை எனக்கு முற்றிலும் தெரியும்.

   

வஸந்த : அக்காள்! தங்கள் நற்குணத்தைப் போல இந்த உலகில் வேறு எவரிடத்திலும் இருக்குமோ! எந்த விஷயத்திலும் தங்கள் மனம் கோணக் கூடாது என்பதே என்னுடைய ஓயாக் கவலை. என்னைத் தங்களுடைய பணிப்பெண்ணாக நீங்கள் இனி மதிக்க வேண்டுகிறேன்.

   

கோகி : ஆகா! நல்ல வார்த்தை சொன்னாய். நீ எனக்கு அருமையான சகோதரி அல்லவா! நாம் இருவரும் ஈனி நமது நாதனுக்குப் பணிப்பெண்கள். (வஸந்தஸேனையின் கரத்தைப் பிடித்து மாதவராயர் வலக் கரத்தில் வைத்து) ஸ்வாமீ. வஸந்த ஸேனையையும் இனி என்னைப் போல மனைவியாக ஏற்றுக் கொண்டு எங்கள் இருவரையும் பணிப்பெண்களாக மதிக்க வேண்டும்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.