(Reading time: 21 - 41 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 10 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

  

இடம் : இராஜ வீதி.

   

இரண்டு பேர் மாதவராயரைக் கழுமரம் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போகும் சமயம்.

   

ஜனங்கள் நெருங்குகிறார்கள்.

   

மாதவராயர் பாடிக் கொண்டு வருகிறார்.

   

நாதநாமக்கிரியை - திரிபுடை

   

ப. இதுவோ தலைவிதியோ? எனது காலகதியோ?

   

அ. பொதுளும் பொரு ளிழந்தும் உறுவோர் தலையிழந்தும்

   

துதியும் புகழிழந்தும் மதியாச் சிறுமைதன்னில்

   

பதியும் மனையும் சேயும் அகலக் கொலைஞனானேன்;

   

கதியே திணிக் கருணாநிதியே யெனது துணை (இது)

   

1 சண் : இதென்ன இம்பிட்டுக் கூட்டம் போங்கையா அப்பாலே. ஒங்கிளுக்கெல்லாம் இங்கிட்டு என்னய்யா சோலி?

   

2 சண் : பட்டிக்காட்டான் முட்டாயிக் கடையெப் பாக்கராப்புலே என்னையா இப்படிப் பார்க்கிறீங்க? என்னமோ பாவம் பெரிய வீட்டுப்புள்ளே தலைவிதியினாலே போறாரு. கூட்டங்கூட வாணாம் போங்கய்யா.

   

மாத : (ஒருபுறமாக மனிதனுடைய சத்ருவாகிய கர்ம வினையின் மாறுபாட்டை யார்தாம் அறிவர். எனக்கு இவ்விதமான கால வித்தியாசம் ஏற்படப் போகிறதென்று நான் ஒரு நாளும் நினைக்கவே இல்லை; வீதியின் வழியாகக் கட்டி இழுக்கப்படும் நிலைமைக்கு வருவேன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.