Page 9 of 11
"கொன்னுட்டே போ, யமுனா!"
வண்டி தார்ப்பாதையில் செல்கிறது. தெருவெல்லாம் ஒளி மயங்கள் - நெரிசல்கள் - போக்குவரத்து ஊர்திகள்.
"கடைசியில் வளைச்சு வளைச்சுக் கேள்வி கேட்டானே, அவனைத் தெரியுமா, யார்னு?"
"ஹம்...?"
"அவன் தான் சுதீர்குமார். கீழ வெண்மணிக்கப்புறம் ஆளே தலைமறைவா இருந்தாப்பல. இன்னிக்கு வந்திருக்கிறான்..."
"ஓ..."
"ஆனாலும் நீ படுபிரமாதம்? பாலிடிக்ஸில் பிரமாதமா ஷைன் பண்ணுவே!"
"..."
"என்ன பேசலே? அன்னிக்கு நான் சொன்னதை எதிர் பாராம சரின்னு ஒப்புக் கொண்டுட்டே. அப்ப..."
வண்டி ஓர் ஒளிமயமான உலகில் முன் வந்து நிற்கிறது.
ஒரு... ஓட்டல்.
"வீட்டுக்குப் போலாமே? மணி எட்டரையாகிறதே?"
"எனக்குத் தெரியாதா? நீ இறங்கு சொல்றேன்."
"எதற்கு? வீட்டுக்குப் போகணும் எனக்கு..."