இச்சமயம் ஏழெட்டு பிராம்மணர்கள் கூட்டமாக வந்து கனபாடிகளைப் பார்த்து கைகூப்பி வணங்கினார்கள்.
"இந்த பதைபதைக்கிற வெயில்ல எல்லாருமா எங்க இவ்வளவு தூரம் ?" என்று இழுத்தாற்போல் கேட்டார் கனபாடிகள்.
மழையே இல்லாம ஏரி குளமெல்லாம் வறண்டு போச்சு, பயிர் பச்சையெல்லாம் பாழாப் போயிடும் போல இருக்கு, ஆடு மாடெல்லாம் ஒவ்வொண்ணா செத்துண்டிருக்கு. நீங்கதான் காப்பாத்தணும்" என்றார்கள்.
”நான் என்ன பண்ண முடியும்?" என்று கேட்டார் கனபாடிகள்.
"உங்க வாயால விராடபர்வம் வாசிச்சா போதும் ! மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிடுமே!" என்றார்கள்.
"விராட பர்வம் யார் வாசிச்சாலும் மழை வரும் ! அந்தக் கதையின் மகிமை அப்படி" என்றார் கனபாடிகள்.
"இருக்கலாம். ஆனா உங்க மாதிரி யாகம் பண்ணவா, சாஸ்திரம் படிச்சவா, வேதம் ஒதினவா வாயால சொன்னா அதனுடைய மகிமையே தனி" என்றார்கள்,
"நீங்கள்ளாம் கொஞ்ச நாளைக்கு முன்னால எங்கிட்ட சாஸ்திர விளக்கம் கேட்க வந்தப்போ நான் சொன்ன தீர்ப்பு உங்களுக்குப் பிடிக்கல. அதுக்காக என் மேல கோபப்பட்டு என்னையே பாய்காட் பண்ணப் போறதாப் பேசிண்டேளாம். நான் சாஸ்திரம் படிச்சவன் வேதம் ஒதினவன் என்பதெல்லாம் உங்களுக்கு அப்பத் தெரியாமப் போச்சு. இப்ப மழை வேணுங்கறப்ப மட்டும் தெரியறது இல்லையா? தயவுபண்ணி என்னை மன்னிச்சடுங்க. என்னை பாய்காட் பண்றேன்னு சொன்ன உங்களை இப்ப நான் பாய்காட் பண்றேன். விராட பர்வம் வாசிக்கறதுக்கு வேற ஆளைப்பாருங்க. என்னால முடியாது" என்று கோபமாகச் சொல்லிவிட்டு எழுந்தார்.
"அப்படியா சொல்றேள்? முடிவான வார்த்தைதானா?" என்று கொஞ்சம் கோபமாகவே குரல்