(Reading time: 10 - 19 minutes)

"நீ இயற்கையிலேயே ரொம்ப அழகு கீத்து. நீ குண்டா இருந்தாலும் அழகுதான். ஆனா குண்டான உடல் பல உடல் கோளாறுகளை உருவாக்கும். எந்த வேலையையும் சிரமத்துடன் செய்யணும். ஆசைப்பட்ட டிரஸ் போட முடியாது. அப்புறம் சீக்கிரமே கிழடு தட்டிப் போய் விடும். இதெல்லாம் உனக்கும் தெரிஞ்சிருந்தாலும்  ரெண்டு குழந்தைகளை   பெத்ததால உனக்குள் ஒரு அலுப்பு , அதனாலதான் நீ உன்னை கவனிச்சுக்கவே இல்லை. நானும் ஆரம்பத்துல சொல்லித்தான் பார்த்தேன் , நீ காதுலயே போட்டுக்கலை .   சோம்பேறித்தனத்தால உன்னை நீயே  கவனிச்சுக்காம இருந்தது தான் எனக்கு  வருத்தம்.  நா கோபமா பேசினதெல்லாம் வெறும் நடிப்பு தானே தவிர உண்மையில்லை. அப்படியாவது நீ ரோஷம் வந்து உன் உடம்பை கவனிச்சுக்க மாட்டியா என்றுதான் நா விலகிப் போனேன். பரவாயில்லை. சமயத்துல உங்க அக்காவோட புத்திமதியும் கிடைச்சுது.  இப்போ நீ  எவ்வளோ  அழகா  இருக்கே  தெரியுமா. நீ இந்த அளவுக்கு மாறியது எனக்கு ரொம்பவும் சந்தோசம்.  ஏன்  உனக்கும் சந்தோஷம்தானே கீத்து? ஆனா ஒரே ஒரு வருத்தம் " என்றான்.

அவனை வியப்பாக பார்த்தாள் அவள் "என்னது வருத்தமா? "

“ஆமாம், இனிமேல் நானும் கஷ்ட்டப்பட்டு என் உடம்பை  இதேபோல மெயின்டையின் பண்ணணுமே, நான் இப்படி ட்ரிம்மாக இல்லாம தொப்பையும்  தொந்தியுமா  ஆயிட்டா   எல்லோரும் என்னை உன்னோட அங்கிளா என்று கேட்டுட மாட்டாங்களா?” என்றான் சோகத்துடன்.

 "யாரும் கேக்கலைன்னாலும் நானே உங்களை என்னோட அங்கிள்ன்னு அறிமுகப்படுத்திடறேன்  சரிதானே "? என்றவள் அவன் அடிக்க வருவதற்குள் துள்ளி குதித்து ஓடினாள்.

மானைப் போன்ற அந்த துள்ளலில் தன்னை மறந்து  நின்றான் பிரபாகர்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.