கவிதை சிறுகதை - கௌரவ மணம் - நர்மதா சுப்ரமணியம்
அனல் தெறிக்கும்
கோபப்பார்வையுடன்
அவனை முறைத்திருந்தார்
அவனின் தந்தை.....
அயல்நாட்டின் பொருளாதார பின்னடைவினால்
வேலை பறிப்போய்
மனம் நொந்த நிலையில்
சோக முகத்துடன் அவன்...
தங்களின் கௌரவத்திற்கேற்ற
குடும்பமாய்....
தங்களுக்கு இணையான
பெரும் பணக்கார குடும்பமாய்
பார்த்திருந்தார் அவனின் தந்தை
அவனின் திருமணத்திற்கு...
அவனுக்கு பெண்ணையல்லாது
பணத்தை மணம் செய்விப்பதே
தந்தையான
அக்கௌரவத்தாரின் எண்ணம்...
அவ்வெண்ணத்திற்கு
தீ வைத்தாற் போல்
வந்து நின்றான் அவன்
வேலை பறிப்போன நிலையில்....
வேலை இல்லை..
வேலை கொடுத்த பணம் இல்லை..
பணம் கொடுத்த கௌரவமுமில்லை..
எங்ஙனம் போய் பெண் கேட்பேன்
பெரிய இடத்திலென
சீறிக்கொண்டிருத்தார்
அப்பெருந்தகையார்....
பணம் மட்டுமே கௌரவமாய்
எண்ணிக் கொண்டிருக்கும்
சிறுமை எண்ணம் கொண்ட
அப்பெருந்தகையார்....
பணத்தையல்லாது,
அன்பே பிரதானமாய்
சகலரையும் மனிதனாய்
மதிக்கும் மனிதமும்...
நேர்மையான சுயநலமற்ற
சிந்தையின் நல்லெண்ணமுமே
கௌரவமாய் எண்ணி
வாழும் அவன்
இடித்துரைத்தான் தந்தையிடம்,
பணம் என்கின்ற கௌரவத்தை
சுட்டிக்காட்டி பெரும்
குடும்ப பகையாக்கி
தன் தந்தை ஒதுக்கி வைத்த
அத்தையின் மகளை மணமகளாக்க
அவ்வீட்டின் மருமகளாக்க....
அதுவே தன் இறுதி முடிவுமென
உறுமலாய் உரைத்து
நகர்ந்தான் அவ்விடத்தை விட்டு...
அவ்வண்ணமே
தன் எண்ணமுமென
மகனை வழிமொழிந்தார்
அவனின் அன்னையும்...
வேலையில்லா நிலையில்
பணமில்லா நிலையில்
பெருத்த செல்வந்தர்கள்
அவர்களின் பெண்ணை
இனி தன் மகனுக்கு
மணம் செய்விக்க
வழியில்லை என்கின்ற ஆற்றாமையாலும்.....