(Reading time: 14 - 27 minutes)

சரி ஆத்தா நான் பாத்துக்கறேன் என்று சொல்லி விட்டு, வாக்கா என்று கண்ணமாவை அழைத்துக் கொண்டு வீடிருக்கு வந்தாள்.

வீட்டில் அவள் கணவன் மாரியப்பன் படுத்திருந்தவன் கண்ணம்மாவை கைத்தாங்கலாக அழைத்து வருவதைக் கண்டதும் பதறி எழுந்து அமர்ந்தான். என்ன புள்ள என்ன ஆச்சு ? என்று பரிதவிப்புடன் கேட்க..

ஒண்ணுமில்லை மச்சான் என்று சொல்லிக் கொண்டு அவள் உள்ளே சென்றாள்.

என்ன ஆச்சு பொன்னுதாயிடம் கேட்க, எல்லாம் நல்ல சேதிதான் அண்ணே நீ அப்பாவாக போறே என்று சொல்லியவள் சரி சரி எனக்கு நேரமாவுது நான் ஆத்தா கிட்ட சொல்லிக்காம வந்துட்டேன் இந்நேரத்துக்கு என்னை தேடிகிட்டு இருக்கும் நான் வாறேன் என்றவாறு புறப்பட்டாள்.

மாரியப்பன் கண்ணமாவின் அருகில் வந்து அமர்ந்தான்.என்ன புள்ள எம்புட்டு நல்ல சேதி இதுக்காக நாம எம்புட்டு நாள் காத்துகிட்டு இருந்தோம் நீ ஏன் முகத்தை இப்படி வைச்சிட்டு இருக்கே....?

இல்ல மச்சான் பழசெல்லாம் ஞாபாகத்திற்கு வந்திடுச்சி. இந்நேரம் நம்ம குழந்தை மட்டும் உசிரோட இருந்திருந்தா அவளுக்கு 5 வயசு ஆயிருக்கும் எம்புட்டு வளர்ந்திருப்பா நம்ம பொண்ணு இல்ல மச்சான் .. ?

ஏன் புள்ள நடந்ததையே நினச்சிட்டு மனசை போட்டு குழப்பிக்கறே..?

இல்ல மச்சான் ஒரு வேளை இப்பவும் அது மாதிரி எதவது நடந்திட்டா...?

அப்படியெல்லாம் ஏதும் நடக்காது புள்ள எல்லாம் நல்ல படியா நடக்கும் என்று சமாதனம் சொல்லிவிட்டு சென்றான். அவன் சமாதனம் சொல்லி விட்டானே தவிர அவனுக்குமே அந்த பயம் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது.

கண்ணமாவின் கண்முன் பழைய நினைவுகள் எல்லாம் ஒரு மழைச் சாரலாய் வந்து போனது.

அப்போது அவர்களுக்கு திருமணமான முதல் வருடம் கண்ணமா கருவுற்றிருந்தாள். முதல் குழந்தை என்பதால் இருவருக்குமே மிகுந்த மகிழ்ச்சி. மாரியப்பன் பழவகைகள் அனைத்தும் வாங்கி குவித்தான்.கண்ணமாவை விழுந்து விழுந்து கவனித்தான்.

மாதம் நெருங்க நெருங்க சற்று பயம் வந்தது. காரணம் அந்த கிராமம் மிகவும் கட்டுபாடு நிறைந்தது. அந்த காலத்தில் பெண் குழந்தைகள் என்றாலே சிசுவிலே அழித்து விடுவார்கள். தப்பி பிறந்து விட்டாலும் கூட கள்ளிப் பால் கொடுத்து அந்த பிஞ்சு சிசுவின் உயிரை மாய்த்து விடுவார்கள்.

ஒருவேளை பிறக்க போவது பெண்ணாக இருந்தால் என்ன செய்வது என்ற பயம் இருவரின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. பிரசவ நாளும் வந்தது, கண்ணமா வலியால் துடித்தாள் மருத்துவச்சி வந்து பிரசவம் பார்த்து குழந்தையும் பிறந்தது.

அவர்கள் பயந்தது போலவே பிறந்தது பெண் குழந்தைதான். உடனே ஊர் கட்டுப்பாடு படி குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுக்கும் படி ஊர் பஞ்சாயத்து தலைவர் சொல்லவும். கண்ணமா துடித்து போனாள். என்னதான் இருந்தாலும் பத்து மாதம் சுமந்து பெற்றவள் ஆயிற்றே...வலியும் வேதனையும் அவளுக்கு தானே தெரியும். அவள் மனம் பதை பதைக்க அவள் குழந்தையை மருத்துவச்சி எடுத்துச் சென்றாள்.

இன்னும் அந்த வலியும் வேதனையும் அவள் மனதை விட்டு நீங்க வில்லை. இப்போதும் அது போல் எதுவும் நடந்து விட கூடாது என்று என்றெண்ணி ஊர்க் கோவிலில் உள்ள மாரியம்மனுக்கு வேண்டி மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்திருந்தாள்.

மாதம் பத்து நெருங்கியது, கண்ணம்மா வலியால் துடித்தாள். மாரியப்பன் உடனே மருத்துவச்சியை அழைத்து வந்தான். மகப்பேறு முடிந்து குழந்தையும் நல்ல படியாக பிறந்தது. கண்ணம்மாவும் மாரியப்பனும் வேண்டியபடியே இந்த முறை ஆண் குழந்தையாக பிறந்தது. குழந்தை அப்படியே தன் கணவனை உரித்து வைத்தாற்ப் போல் பிறந்திருந்ததை பார்த்து பார்த்து மிகவும் பூரித்து போனால் கண்ணம்மா. மாரியப்பன் வந்து குழந்தையை கையில் எடுத்துக் தன் நெஞ்சோடு அனைத்துக் முத்தமிட்டான்.

பிள்ளைக்கு ஹரி என்று பெயரிட்டு அவர்கள் ஆசைப் பட்ட படி, செல்லமாகவும் வளர்த்து வந்தார்கள்.அவனும் நன்றாகவே படித்து வந்தான்.

அவன் பள்ளி படிப்பை முடித்ததும், அவனை மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் மரியப்பனுக்குள் இருந்தது, ஆனால் கண்ணம்மாவோ அவன் மேல் படிப்பு படிக்க பட்டணம் போக வேண்டியிருக்குமே என்று தன் கணவனை தடுத்தாள். நாம் தான் படிக்காமல் இருந்து விட்டோம் நம் பிள்ளையாவது நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி அவளை சமாதானம் செய்து தன் மகனை பட்டணம் அனுப்பி மேலும் படிக்க வைத்தான்.

ஆனால் ஹரியோ அவன் படிக்க சென்ற இடத்தில் நண்பரகளுடன் சேர்ந்து புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற பல தீயப் பழக்கங்களை கற்றுக் கொண்டான். படிக்க சென்ற புதிதில் மட்டும் விடுமுறை நாட்களில் சில முறை தாய் தந்தையை பார்க்க தன் ஊருக்கு வந்து சென்றான். இப்போது அதுவும் இல்லை. தந்தை வந்தாலும் அவன் நண்பர்களிடம் எதாவது சாக்கு சொல்லி பார்க்காமலேயே அனுப்பி விடோவான். தன்னை இந்த நிலையில் பார்த்தல் அவர் மிகவும் மனம் வருந்துவார்,அதை தாயிடம் சொன்னால் அவரின் மனமும் வேதனை அடையும் என்று எண்ணினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.