(Reading time: 14 - 27 minutes)

மேற்படிப்பை முடித்து அவன் ஊருக்கு திரும்பினான். பிள்ளையின் போக்கை பார்த்த பெற்றோர்கள் நாம் தான் அதிகமாக செல்லம் கொடுத்து அவனை கெடுத்து விட்டோமோ என்று மனம் வருந்தினர்.

தீபா அந்த கிராமத்திற்கு வந்து அங்குள்ள சில இளைஞரகளை போதை பழக்கத்தில் இருந்து மீட்டு நல் வழிப் படுத்தினாள். ஹரியை திருத்தி, அவனிடம் இருந்த தீயப் பழக்கங்களை எல்லாம் மாற்றி நல் வழிப்படுத்தினாள். மேலும் அங்குள்ள கிராம மக்களுக்கு பெண் குழந்தைகளை கருவில் அழிப்பது தவறு என்றும், குழந்தை பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்து கொள்வது சட்டப்படி குற்றம் என்றும் எடுத்து விளக்கி சொல்லி இனி அது போன்ற காரியங்களை செய்ய கூடாது என்றும் வலியுறுத்தினாள் .

பெண் என்பவள் உலகில் போற்ற பட வேண்டியவள், உலகில் பெண் என்ற ஒருத்தி இல்லாமல் நீங்க எவ்வாறு பிறக்க முடியம் உங்களை பெற்றவள் ஒரு தாய் என்றால் உங்களுடன் வாழ்ந்து உங்களுக்கு ஒரு பிள்ளையை பெற்றுக் கொடுப்பவளும் பெண்தானே...?

நாம் என்ன தான் தவறு செய்தாலும் இந்த பூமியில் எத்தனை போர் நடந்தாலும் அவை அனைத்தையும் தாங்கி கொண்டு பொறுமையை நம்மை சுமந்து கொண்டு நிற்கிறாளே இந்த பூமித் தாய் அவளும் ஒரு பெண்தான். பெண் என்பவள் பொறுத்து போகும் குணம் கொண்டவள் நீங்கள் தவறுகள் ஆயிரம் செய்த போதிலும் அதை தாங்கி கொண்டு செல்பவள் பெண்தானே. குழந்தை பிறந்த அந்த நொடியில் பெண்ணாக பிறனைத் ஒரு காரணத்திற்க்கா மட்டுமே இந்த மண்ணில் விதைக்க பட வேண்டிய எத்தனை உயிர்கள் புதைக்க பட்டுள்ளன. பத்து மாதம் கருவில் சுமப்பவள் பெண், அவள் கண் முன்னே அந்த பச்சிளம் குழந்தைக்கு அவள் மனம் துடிக்க துடிக்க கள்ளிப்பால் கோட்டுக்கும் போது பெற்ற மனம் எப்படி வலித்திருக்கும் என்று நீங்கள் ஒரு முறையாவது நினைத்து பார்த்து இருப்பீர்களா..? என்று அந்த கிராம மக்களிடம் பேசி விழிப்புணர்வைக் கொண்டுவரச் செய்தாள்.

தன் மகனை திருத்திய அந்த புண்ணியவதியை பார்க்க வேண்டும் என்று ஹரியிடம் கண்ணம்மா கேட்க ஹரி அவர்களை தீபாவிடம் அழைத்துச் சென்றான்.

அக்கா இவங்க தான் எங்க அம்மா அப்பா என்று அறிமுகம் செய்து வைத்தான். தீபாவை பார்த்ததும் கண்ணம்மாவிற்கு தன் மகளையே உயிரோடு பார்ப்பது போல் ஒரு பிரம்மை. ரொம்ப நன்றிம்மா எங்க பையனை திருத்தி நல்ல படியா மாத்திட்ட நீ நல்லா இருக்கணும் என்று கண்ணம்மாவும் மாரியப்பனும் தீபாவை பார்த்து கூறிட, என்னம்மா இது நீங்க வயசுல பெரியவங்க நீங்க போய் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு, எதாவது சாப்பிடறீங்களா ...?

அதெல்லாம் ஒன்னும் வேண்டாமம்மா உன்னை பார்த்து நன்றி சொல்லிட்டு போகலாமின்னு தான் வந்தோம். அம்மாடி உன்னை பார்க்கும் போது எனக்கு எங்களோட இறந்து போன பொண்ணு ஞாபாகம் வந்திடுச்சி. இந்நேரத்துக்கு எம்பொண்ணு உசிரோட இருந்திருந்தா அவளுக்கு உன் வயசு தான் இருந்திருக்கும். உன்னாட்டமே வளர்ந்திருப்பா. நீ இப்ப சொன்ன மாதிரி ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி யாராவது வந்து இப்படி சொல்லியிருந்தா நான் எம்பொண்ண பறி கொடுத்திருக்க மாட்டேன் என்று கண்ணீருடன் பேசிய கண்ணம்மாவிடம்,

அதனால என்னம்மா என்னையும் உங்க பொண்ணா நினைச்சிக்கோங்க என்று சொன்ன தீபாவை இறுக்கி பிடித்துக் கொண்டாள் கண்ணம்மா.

நாளைக்கு நாங்க எல்லாரும் கேம்ப் முடிஞ்சு ஊருக்கு போக போறோம் அம்மா, நீங்க எல்லாம் அவசியம் ஒரு முறை சென்னைக்கு எங்க வீட்டுக்கு வரணும். நான் போகும் போது அட்ரெஸ் கொடுத்தது போறேன். கண்டிப்பா வரோம்மா என்று சொல்லி விடை பெற்றார்கள்.

றுநாள் காலை,

தீபா ஊருக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தாள்,

ஏய் தீபா ஊர்ல இருந்து உங்க அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்கடி என்று தோழி வந்து சொல்லவும், ஆச்சரியத்துடன் வெளியே ஓடி வந்தாள்.

என்னப்பா திடிர்னு இப்படி சொல்லாம கொல்லாம, நான் இன்னைக்குதான் இங்க இருந்து கிளம்பறதுக்கு எல்லாம் ஏற்பாடும் பண்ணிட்டு இருக்கேன். நீங்க வந்தது சர்ப்ரைசிங்கா இருக்கு ...?

என்னமாம் நீ மறந்துட்டியா இன்னைக்கு உன்னோட பிறந்தநாள்டா ... எப்பவுமே உன்னோட பிறந்தநாள நாம எல்லாரும் சேர்ந்து கொண்டாடறதுதானே வழக்கம் இப்ப மட்டும் எப்படி ..?

ஐயோ அப்பா நான் மறந்தே போயிட்டேன் ... நல்ல சமயத்துலதான் வந்துருக்கீங்க என்னோட சேவையை பாராட்டி எனக்கொரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணிருக்காங்க அப்பா நல்ல வேளை நீங்களே வந்துட்டீங்க.

உன்னை பெற்ற மகராசிக்கு தான் இந்த பெருமையெல்லாம் சேரனும் என்று மனதினுள் நினைத்துக் கொண்டாள் அன்னபூரணி.

மேடையில் ஊர்த்தலைவர்கள் அனைவரும் தீபாவைப் பாராட்டி பேசினார்கள். பாராட்டி சிறப்பித்ததோடு மட்டுமில்லாமல் ஒரு நினைவு பரிசு ஒன்றும் தந்தார்கள். தீபா அதை தன் பெற்றோர் கைகளால் வாங்க வேண்டும் என்று ஆசைபட்டு, தன் பெற்றோர்களை மேடைக்கு அழைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.