(Reading time: 14 - 27 minutes)

மேடைக்கு வந்த அவள் பெற்றோகள், தீபா இந்த பரிச நாங்க கொடுக்கறதுக்கு முன்னாடி உங்கிட்ட ஒரு விசஷயத்தை சொல்ல நினைக்கறோம் அதும் இந்த மேடைல சொன்ன நல்லா இருக்கும்னு நினைக்கிறோம். என்ன என்பது போல் தன் புருவம் உயர்த்தி பார்த்தாள் தீபா.

எங்களுக்கு கல்யாணமாகி ரொம்ப வருஷமாகியும் குழந்தையே இல்லாம இருந்தது. குழந்தை வரம் கேட்டு நாங்க கோயில் கோயில்லா போனப்போ நாங்க வர்ற வழியில கார் பஞ்சர் ஆயிடுச்சு நல்ல மழை வேற அப்ப இந்த ஊர் எல்லையில் இருக்கிற ஒரு மண்டபத்துல மழைக்காக கொஞ்சம் நேரம் ஒதுங்கி நின்றிருந்தோம். அப்போ அங்க ஒரு குழந்தையோட அழு குரல் கேட்டது என்னனு போய் பார்த்தோம் அங்க ஒரு வயசான அம்மா கைல ஒரு அழகான பெண் குழந்தை இருந்தது.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

என்ன ஏதுன்னு விசாரிச்சோம், அந்த குழந்தை பொம்பிளை பிள்ளையாய் பிறந்து பாவம் பண்ணிடுசும்மா பிறந்துதும் அம்மாவோட மார்புல தாய் பால் குடிக்க வேண்டிய குழந்தை இப்போ என் கையால இந்த கள்ளிப் பாலை குடிச்சிட்டு உசிர விடப் போகுது என்று சொன்னாள்.

உடனே நாங்க எங்க நிலமைய சொல்லி எங்க கிட்ட அந்த குழந்தைய தரச் சொன்னோம், அந்தம்மா ஊர் கட்டுப்பாட்டின் படி தரக் கூடாது ஊர் ஜனங்களுக்கு தெரிஞ்சா என்னை ஊரே விட்டே ஒதுக்கி வச்சிடுவாங்க அப்படின்னு சொல்லி மறுத்தாங்க.

இல்லம்மா இந்த உண்மைய நாங்க யார் கிட்டயும் சொல்ல மாட்டோம் நீங்க எங்கள நம்பலாம். என்று சமாதனம் சொல்லி அவர்களிடம் இருந்து அந்த குழந்தையை அன்னைக்கு நாங்க வாங்கிட்டு போனோம் அந்த குழந்தை வேற யாரும் இல்லைம்மா நீதான் என்று சொன்னாள் அன்னபூரணி . உன்னோட அப்பா அம்மா இதோ இந்த மாரியப்பனும், கண்ணம்மாவும். தான் அன்னைக்கு இந்த குழந்தை வேண்டான்னு நீங்க உதறி தள்ளிட்டீங்க ஆனா இன்னைக்கு இந்த பெண் குழந்தை தான் படிச்சி முன்னேறி இப்ப ஒரு கிராமமே அவளக்கு பாராட்டு விழா நடத்தற அளவுக்கு வந்திருக்கா. இப்படி பட்ட ஒரு பொண்ண தான் நீங்க அன்னைக்கு வேண்டான்னு சொல்லிட்டீங்க இப்ப அவ இந்த பரிச தன் பெத்தவங்க கையால வாங்க ஆசை படறா, ப்ளீஸ் மேடைக்கு வாங்க என்றார்கள்.

உடனே மாரியப்பனும் கண்ணாமாவும் மேடையேறி வந்து நம்முடைய மகள் தீபா என்று பெருமையோடும் மகிழ்ச்சியோடும் அவளை கட்டிக் கொண்டு முத்தமிட்டனர். தீபாவும் தன் பெற்றோர்களை கட்டியனைத்தபடி அங்கு மகிழ்ச்சி நிலவியது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.