கிடையாது, குடும்பத்தோட வெளியூர் சுற்றுலா போக ஒருமாச லீவு உங்களுக்கு, தீவாளிக்குக்கூட கிராமத்துக்கு போக முடியாது, நாங்க........ வேற வழியில்லே, தீடீர்னு வேலையைவிட்டு என்னை நீக்கறீங்களே, ஐயாவை இந்தமாதிரி வேலையிலிருந்து நீக்கமுடியுமா? தொழிற்சாலைலே, நீங்க தொழிலாளி, ஆனா வீட்டிலே நீங்க முதலாளி! உங்க வீட்டிலே வேலை செய்கிறவளை அடிமையா நடத்துவீங்க, ஆனா உங்க முதலாளி ஏதாவது மறுத்தால், கொடி பிடிப்பீங்க, வேலைநிறுத்தம் செய்வீங்க, மறியல் செய்வீங்க, இதுதான் இன்னிக்கு நாட்டிலே நடக்குது.....சரி சரி, பிள்ளைகுட்டிகளை காப்பாத்தியாகணும், வேலையைவிட்டு நிறுத்திடாதீங்க! நீங்க சொல்றதை கேட்டு நடக்கிறேன், சேலை கொடுக்க மறந்துறாதீங்க, கட்டியிருக்கிற சேலை கிழிஞ்சுபோயிடுச்சு,.........."
வள்ளி பேசியதிலுள்ள நியாயம், மரகதம்,சின்னசாமிக்குப் புரிந்தாலும், புரியாதமாதிரி மௌனமாயிருந்தனர்.