கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சிறுகதை - உண்மையான கிறிஸ்துமஸ் - ஜெப மலர்
குளிர் பிரதேசம்....
நம்பர் ஒன் பிஸ்னஸ் மேன் அபிஷேக், இந்த ஆண்டு பண்டிகைக்கு உறவினர்கள் நண்பர்கள் தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்வோர் பக்கத்து வீட்டு காரர்கள் என அனைவரையும் சந்தோஷ படுத்தனும் என்று காஸ்ட்லியான பரிசுகளை தேடி தேடி வாங்கினார். நேரம் இரவை தொடுவதை உணர்ந்தவர் வேகமாக பர்சேஸிங்கை முடித்துவிட்டு கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தார். அனைத்து பொருட்களையும் பின் புறத்தில் அடுக்கியவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார்.
அவர் மனதில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. எல்லாருக்கும் அதிக பண மதிப்புள்ள பொருட்கள் வாங்கி இருப்பதால் தன்னை பாராட்டுவதோடு இனி மரியாதையாகவும் நடந்து கொள்வார்கள் என்று நினைத்தான். காரை ஆன் செய்தவன் சற்று தலை வலிப்பது போல் தோன்றவும் காரை ஆப் செய்து விட்டு காபி ஷாபை நோக்கி நடந்தான்.
சிறிது தூரம் நடந்தவனின் முன்பு வந்து நின்றான் ஒரு சிறுவன். பார்ப்பதற்கு பரிதாபமாய் காணப்பட்டான். அவனை பார்த்ததும் அவனின் ஏழ்மை அபிஷேக்கிற்கு முகத்தை சுளிக்க வைத்தது. அண்ணா ரொம்ப குளிருது, பழைய குளிர் கோட்டு இருந்தா கொடுங்க என்று கேட்ட சிறுவனின் சொற்கள் அபிஷேக்கின் காதில் நுழையவில்லை. அந்த சிறுவனை கடந்து எப்படி செல்வது என்று மட்டும் யோசித்தவன் சிறுவன் கையில் சிறிதளவு பணத்தை திணித்தவன் கடந்து சென்றான். சிறுவன் செய்வதறியாமல் சற்று தொலைவில் இருந்த திண்டில் அமர்ந்து கொண்டான்.
காபி ஷாபிற்குள் சென்றவன் ஆர்டர் கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்க தொடங்கினான். அப்பொழுது அவனது கண்ணில் சற்று முன் பார்த்த சிறுவனும் அவனோடு பேசி கொண்டிருந்த சிறுமியும் தென்பட்டனர்.
சிறுமியை பார்க்கும் போதே அவள் சாப்பிட்டு இரண்டு நாள் இருக்கும் என்று எண்ண தோன்றியது. இவர்கள் இரண்டு பேரும் அண்ணன் தங்கையாக இருக்கனும், இவங்களுக்கு இதே வேலை தான் போல என்று எண்ணியவனின் கவனத்தை திருப்பும் வகையில் சர்வர் காபியுடன் வந்த நின்றான். காபியை வாங்கி குடித்தவன் பில்லை கட்டி விட்டு வெளியே வர முயலுகையில் கார்னரில் இருந்த குட்டீஸ் செக்ஸன் அவனை கவர்ந்து இழுத்தது. அவனது கண்களில் தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் தெரிந்தது. அவன் மனதோ எனக்கு ஒரு குழந்தை இருந்தால் அதை எப்படியெல்லாம் கவனித்து கொள்வேன் என எண்ண வைத்தது.
எல்லா எண்ணங்களையும் ஓரங்கட்டி விட்டு வெளியே வந்தவனின் கண்கள் மீண்டும் அந்த