(Reading time: 7 - 13 minutes)

சிறுகதை - ஏன் அப்படி செய்தாள்? - ரவை

ரெங்கும் இதே கேள்வி!

'அவள் ஏன் அப்படி செய்தாள்?'

ஒருவராலும் அதை நம்பமுடியவில்லை!

வெளித் தோற்றத்தில் அத்தனை மென்மையானவளாக, பயந்தவளாக, அடக்கமானவளாக இருப்பவளா, அப்படி செய்தாள்?

அவள் செய்ததை புகைப்படத்துடன், சந்தேகத்துக்கு இடமின்றி, எல்லா ஊடகங்களும் வெளியிட்டு மக்களை பேச வைத்துவிட்டன!

ஆனால், ஒருவருமே அவள் அப்படி செய்ததின் காரணத்தை, அவளை அப்படிச் செய்ய கட்டாயப்படுத்திய சூழ்நிலையை, கண்டுபிடிக்க முடியவில்லை!

அவள் எங்கிருக்கிறாள்? வெளிநாடு சென்றுவிட்டாளா? இந்த நாட்டிலேயே தலைமறைவாக வாழ்கிறாளா?

அவளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளவர் யார்?

அவரால், அவள் கணவனின் எதிர்ப்பை சமாளிக்க முடியுமா?

அவள் கணவனுக்கு, காவல் துறையில், அமைச்சரவையில், அரசியல் கட்சிகளிடையில், அதிக செல்வாக்கு உள்ளவராயிற்றே!

 ஒருவேளை, அவளை அவர் தீர்த்துக் கட்டிவிட்டாரா?

 ஏனெனில், அவர் அவளை தீவிரமாக தேடுவதாகவே தெரியவில்லையே!

 அவர் செல்லும் இடமெல்லாம், ஊடகங்கள் அவரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கின்றனவே!

 போதாத குறைக்கு, அவள் அப்படி செய்ததின் காரணங்களை கற்பனையாக ஊடகங்கள் எழுதிக் குவிக்கின்றனவே!

 படிக்கவோ, காது கொடுத்து கேட்கவோ முடியாத அளவுக்கு ஆபாசமாக எழுதுகின்றனவே!

 இந்த சம்பவத்தை வைத்து திரைப்படம் எடுக்கப் போவதாக வதந்தி வேறு!

 அந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க, நட்சத்திரங்களிடையே கடும் போட்டியாமே!

 அந்த திரைப்படத்தை வெளியிடும் உரிமையைப்பெற, விநியோகஸ்தர்களிடையே போட்டா போட்டியாமே!

 கதை, வசனம் எழுத பிரபல எழுத்தாளர் ஒப்புக் கொண்டுவிட்டாராமே!

 அவள் கணவன், அவமானம் தாங்காமல், தற்கொலை செய்துகொண்டால், ஆச்சரியப்படுவதற்கில்லை!

 எல்லோருக்கும் தெரிந்ததெல்லாம், புகைப்படம் தருவதெல்லாம், இதுதான்:

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.