உசத்தினு ஓடுனா. அப்ப நல்லா அனுபவிக்கட்டும்' இப்படி கடிந்து பேசினாலும் மங்கலத்தின் தாய்மை அவளை அறியாமலையே அவள் விழியிலும் நீர் சுரக்கத்தான் செய்தது.
‘அவ குழந்தை டீ. தெரியாம பண்ணிட்டா'
'குழந்தை தான் கல்யாணத்துக்கு அத்தனை அவசரப்பட்டு நம்ம கெளரவத்தை குழி தோண்டி புதைச்சிட்டு ஓடிச்சோ.அவளுக்கு பரிஞ்சு பேசி காரியத்த சாதிச்சிரலாம் பார்க்காதீங்க. அவள இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வரனும் நினைச்சீங்க அது என் அந்திம அக்னிய சுற்றி தான் நீங்க செய்ய முடியும். மனசில வச்சுக்கங்க.’கூறிக்கொண்டே தன் விழியின் நீரை தன் கணவர் கவனிக்கும் முன் அங்கிருந்து நகர்ந்து விட முடிவெடுத்து , பதில் கூறாமல் தரையை பார்த்தபடி அமர்ந்திருந்த ரங்கநாதனிடம் , ‘மூஞ்சிய தொங்க போட்டது போதும். இந்த காபி தண்ணிய குடிங்க.’ என்று கூறி டம்ளரை அவன் கையில் எரிந்ததிற்கு இணையான வேகத்தில் திணித்து சமையலறையை நோக்கி நடையை கட்டிக்கொண்டாள்.
தன் கையில் திணிகப்பட்ட காபியை குடிக்க மனமில்லாமல் குனிந்து அதை ஈசிசேரின் காலயருகே வைத்துவிட்டு மீண்டும் முன்பு சாய்ந்திருந்த அதே தோரணையில் அதில் சாய்ந்து கொண்டார். அவரின் நினைவுகள் தன் சீமந்த புத்திரியை அவர் கையில் முதன் முதலாய் ஏந்திய அந்த தருணத்தில் ஆரம்பித்து ஒற்றை மகளாய் செல்லமாய் அவர் காலை சுற்றி அவள் துள்ளி திரிந்த ஒவ்வொரு நிகழ்வாய் அசை போட்டுக் கொண்டிருந்தது. ஒரே மகள் என்றதால் தன் மகளுக்கு அளவுக்கு அதிகமாய் செல்லம் குடுத்து வளர்த்த தன் அன்பு போதையால் இன்று அவள் சீரழிகிறாளா?? காதல் போதையால் பெற்றோரை தூக்கி எறிந்ததால் சீரழிகிறாளா?? பெண் போதையால் ஒரு அப்பாவி பெண்ணை ஏமாற்றி சென்ற அந்த கயவனின் சுயநலத்தால் அவள் சீரழிகிறாளா?? இல்லை தன் மகள் இத்தனை கஷ்டபடுகிறாள் என்று தெரிந்தும் தன் மனதை கல்லாக்கி கொண்டு வருத்தப்படாது இருப்பது போல் தன்னை தானே ஏமாற்றி கொண்டிருக்கும் மங்கலத்தின் வரட்டு கெளரவ போதையால் தன் மகள் சீரழிகிறாளா?? என்று வரிசையாய் பல கேள்விகளை ரங்கநாதனின் மனது அவர் புத்தியிடம் வீசிக்கொண்டிருந்தது.
‘'காபியை குடிச்சாச்சா.” என்று மங்கலத்தின் குரல் சமையலறைக்குள் இருந்தபடியே முற்றத்தில் இருக்கும் ராங்கநாதனின் மனக்கேள்விகளுக்கு தடையிட
‘இதோ குடிச்சிட்டு இருக்கேன்’ என்று கூறியபடியே குனிந்து காபி டம்ளரை கையில் எடுத்தார்.
தன் மகளின் நிலையை காண மனம் பொறுக்காமல் வீட்டுக்குள்ளே அடைபட்டு கொண்டாலும் தினமும் ஏதோ ஒன்று அவள் நிலையை நினைவுபடுத்தி விடுகிறதே.இன்று போதை பொருளின் பயன்பாட்டு குறித்து தன் மனைவி வாசித்த இந்த செய்தி.அதற்கும் தன் மகளுக்கும்