" கோமு! என் ஆசைத் தங்கையில்லே! உனக்கு சம்மதம் இல்லேன்னா, நான் எதையும் செய்வேனா?
நீ, என்னையும் என் மகனையும் இருபது வருஷமா கவனிச்சிக்கிறியே, அதை மறப்பேனா?
வா, உள்ளே! உன் எதிரிலேயே, தேவியிடம் இப்ப பேசறேன்....."
உள்ளே வந்தபோது, தர்மனும் வெளியிலிருந்து திரும்பி வீட்டுக்குள் நுழைந்து அவர்களுடன் இணைந்தான்.
" தேவி! இங்கே வாம்மா!"
" என்ன மாமா?"
" நான் சொன்னேனே, அந்த விஷயத்தை மறந்துடு! உங்கம்மாவுக்கும் தர்மனுக்கும் பிடிக்கலே, நான் ஏதோ உனக்கு நல்லதுன்னு நினைத்துச் சொன்னேன், அதை மறந்துடு! சரியா?"
" மாமா! எங்கம்மாவும் நானும் இந்த வீட்டுக்குள்ளே நுழைந்தபோது, அம்மாவுக்கு இருபத்துமூன்று வயது! சரியா தவறா?"
" சரிதான், சொல்லு!"
" அந்த சின்ன வயசிலேயே, அம்மாவின் தாம்பத்ய வாழ்வு முடிந்து விட்டது.
எங்கப்பாவுக்கு அம்மா முதல்தாரம் தான்! அப்பாவும் சின்ன வயசுதான்!
நடக்கக்கூடாத ஒன்று நடந்துவிட்டது. அம்மா அதை ஏற்றுக்கொண்டு, நிம்மதியா இப்ப வாழலையா?
நம்மை மீறிய சக்தி நம்மை ஆட்டிப்படைக்குது! நல்லதோ, கெட்டதோ, நாம் அதை சந்தோஷமா ஏற்றுக் கொள்ளணும், ஏன்னா, கடவுள் நமக்கு ஒருநாளும் கெடுதல் செய்யமாட்டார்.
தென்னைமரத்திலிருந்து விழுந்த கிழவன் உயிர் பிழைத்ததும் உண்டு, வரப்பு தடுக்கி இளைஞன் செத்ததும் உண்டுன்னு, தேவர் ஐயா சொல்லுவாருன்னு நீங்கதானே சொல்வீங்க!
வாழ்க்கைங்கறது, தாம்பத்யம் மட்டுமில்லே, அது பெரிய கடல்! அதிலே, தாம்பத்யம் ஒரு பகுதி! மற்ற சுவைகளை அனுபவிப்போமே!"
" தேவி! எப்படிம்மா இந்த வயசிலே இத்தனை முதிர்ச்சி ஏற்பட்டது, உனக்கு?"
" எனக்கு எது தேவையோ, அதை கடவுள் நிறையவே கொடுத்திருக்கிறார், அதே போல, அம்மாவுக்கும் தந்து அவளை வாழவைத்திருக்கிறார்.... மாமா! நான் பிறக்கும்போதே என் முழு வாழ்க்கையும் அவர் அறிந்ததே! அதனால், எனக்கு எது தேவையோ, அதையும் தந்திருக்கிறார்!"
" சரிம்மா! இனி இந்த வீட்டின் எல்லா பொறுப்பும் உன்னிடம் ஒப்படைக்கிறேன், அம்மா இனி ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும், உம்...என் வருமானம் உட்பட உன்வசம்! நான் தினமும்