சிறுகதை - அஸ்தமன ஜனனம் - ஜனனி
பந்தயக் குதிரையை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது என் இதயம்.இந்த கணம்தான் எனக்கு இந்த புவியில் எனக்கான கடைசி நிமிடம் எனும்போது தோன்றும் நடுக்கம் அதைவிடக் கொடுமை என் மரணத்தின் கோணம் அது நான் கனவிலும் நினைக்காத ஒன்று.அது நடந்தேறும் போது இந்தப் பிறவி கொடுமைகள் அனைத்தும் ஒன்றிரண்டு நிமிடங்களில் அடைந்துவிடுவேன்.
அதைவிடக் கொடுமை எதற்காக நான் இவ்வளவு தூரம் போராடினேனோ அதற்கான பலன் என்னோடு என் மரணத்தோடு புதைந்துபோகும்.
நான் ஏன் பெண்ணாக பிறந்தேனென்று நினைத்ததில்லை சில தினங்களுக்கு முன்னாள்வரை.இப்போதோ எந்தப்பிறவியிலும் மங்கையாக பிறக்க கூடாது என்று மனமானது ஓலமிடுகிறது.
சுற்றிலும் காரிருள் சூழ்ந்திருந்தது என் மனதைப் போல.இப்போது எனது பயம் இருளைக் கண்டல்ல துளி வெளிச்சமும் பரவக்கூடாதென்று.விடியலிலும் வாழ்விலும் வெளிச்சம் வேண்டி நிற்கும் மனிதர்களுக்கு நடுவில் அப்படி நடக்காமல் இருப்பதே என் தேவையென வேண்டுகிறேன்.
காரணமில்லாமல் இல்லை.பெண்ணாய் பிறந்தவளிடமே கற்பு என்ற ஒன்றுள்ளது.அதுவும் அந்த இருக்கால்களின் நடுவில் இருக்கும் சிறு இடைவெளியில்......அவளை பழிதீர்க அந்த இடுக்குகளே முதலிடம் வகிக்கிறது.அதன் புனிதம் என்னவென்று கூட தெரியாத மனித மிருகங்களின் கையில் சிக்கி அழிவதை விட என் சுவாசத்தை நானே நிறுத்திக்கொள்ளலாம் ஆனால் அப்படி செய்தால் யாருக்கும் எந்த உபயோகமில்லை.
மக்கிப்போகும் உடலை குறிவைக்கும் வெறி நாய்களை வென்றிட வேண்டும் என்ற வெறி மூளைக்குள் குடைகிறது.
ஆம் ஆதங்கத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் மனதோடும் குருதி வழிந்தோடும் தேகத்தோடும் மேலாடை இல்லாப் பெண்ணுடலை(என்னுடலை) சுமந்து மறைந்து பயந்து ஓடிக்கொண்டிருக்கிறேன்.
மூவர் ஓர் உடலை பகிர கேவலமாய் உலவிக்கொண்டிருக்கும் இந்த இரவு விடியாமல்தான் போனால் என்ன.
திக்குதெரியா வனாந்திரதில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் உதவ இல்லை.தன் கையே தனக்குதவி என்று சொல்லுவார் அறிவாரோ மார்பகங்களை கொய்ய காத்திருக்கும் கழுகுகளிடமிருந்து காக்க போராடுவது.
மன ஓட்டங்களோடு சேர்ந்து கால்களும் ஓடுகின்றன.பரிச்சயமில்லா இருளில் பயத்தோடு