(Reading time: 18 - 36 minutes)

பரிச்சயமில்லா இடத்தில் எங்கு உள்ளேன் என்றுகூட தெரியவில்லை.

வெறிகொண்ட நாய்களின் கூறிய பற்களில் அகப்பட்ட மாமிசத்தை போல குதறியதாலும் முட்ச்செடிகளின் தாபத்தாலோ தன்னிலை மறந்ததாலோ தெரியவில்லை என் மேனி தழுவியிருந்த பாவாடையும் கடைசியில் பருவமழையால் பொய்த்துப்போன நிலம்போல அங்கம் மறைக்கும் அருகதையற்றுப்போனது.

துயிலுரித்த துட்சாதனப் பிறவிகள் தொடர்ந்திருக்க மானம் காத்த மயிலிரகோன் கலியுகதில் மறைந்திருப்பதேனோ.........

சுற்றிலும் வனம்.கல் மண் முள்ளென்று கரடுமுரடான பாதையிலும் பாதையில்லா  வழியிலும் கிட்டத்தட்ட ஒரு வெறியோடு மனம் கலங்கிய பேதையென ஓடுகிறேன் கால்கள் முடியாமல் கெஞ்சுகின்றன.

முற்களும் கற்களும் முத்தமிட்ட காரணத்தால் செங்குருதி வழியுது......என் மனதில் வழிவதுபோலே......இருப்பினும் நிற்காமல் ஓடு........ வெறிநாய்கள் வேட்டையாட வருகின்றன ஓடு........ இழி பிறவிகள் இச்சையோடு வருகின்றன ஓடு........ கயவர்கள் பறிக்க நினைக்கும் பெண்மையை கொண்ட காளியே ஓடு........ நில்லாமல் ஓடு ஓடு ஓடு ஓஓஓஓஓஓஓஓஓடுடுடுடுடு.........

எதற்காக இந்த அவலம்.கருவறையில் இருக்கும்போதும் கல்லறையில் இருக்கும்போதும் தான் பாதுகாப்பா?ஒருவேளை கல்லறையில் இருக்கலாம் ஆனால் உருக்கொண்டது பெண்ணாயின் கருவறையிலும் போராட்டமே.

என்னென்னவோ கேள்விகள் சாதகமில்லா சூழலில் சுழலாக சுற்றி அடிக்கிறது மனதில்.

ஒருவேளை நாளை என்பது என் வாழ்வில் வரப்போவதில்லை என்பதாலேயே இப்படியொரு புயலடிக்கிறதா என் மனதில்.....

மனதின் வலு கால்களில் இல்லை அனுமதியில்லாமல் இயக்கத்தை நிறுத்தியது.யாதும் செய்ய இயலாமல் ஓங்கி வளர்ந்திருந்த அந்த மரத்தின் அடியில் அடைக்கலமாக குருதியும் வியர்வையையும் போட்டியிட்டு வெளியேறிய வேளை ரத்த நாளங்களில் இருந்து உயிர் உரியப்படுவதைப் போல உலுக்கியது வேதனை.

திசையறியாக் காட்டில் கீற்றாக தோன்றிய அந்த ஒளி கண்டதும் கண்ணில் துளிர்த்த நீர் எதற்காக என்று தெரியவில்லை.

நம்பிக்கை ஒளியா அல்லது அணையப்போகும் விளக்கின் பிரகாசமா?ஒருவேளை ஆள் அரவமில்லா இடத்தில் இருக்கும் இந்த இடம் மற்றுமொரு கயவர்கள் கூடமா?சிந்தனைகள் சிதறிக்கொண்டு செல்ல இழப்பதற்கு ஏதும் இல்லை பெண்மையையும் உயிரையும் தவிர..... ஒருவேளை அதுவும் இழக்க நேரிடின் உயிரில்லா உடலில்தான் அது நடக்கும்.

6 comments

  • [quote name=&quot;madhumathi9&quot;]wow arumaiyaana theerppu :hatsoff: (y) :clap: :thnkx: & :GL:[/quote]<br />Thanks madhu
  • பதினைந்து நிமிடத்திற்கொரு கற்பழிப்பு நடக்கிற இந்த நாளில் இந்த நாட்டில், பெண்கள் ஆயுதம் தாங்கி ஆண்களை அடக்க<br />வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பொறுத்தது போதும், பொங்கி எழு, தாய்க்குலமே!
  • Pengalukku yen indha aniti :angry: <br /> :hatsoff: to saki's bravery 👏👏👏👏 her struggle to defend herself with so much of pain is simply superb 👌<br /><br />Nambikai-in karam nittum mithran dev, :hatsoff: to his timely, assuring, supportive and motivating words. Ivargalai pole Nala ulangal vazhga!!👍 Let everyone be like this.<br /><br />Lastly immediate action towards those demons was perfect end 3:) <br /><br />With the increasing number of cases self defence is the best option but that alone is not enough. It is already too late to take the right measures in protecting our society from this evil act. <br />Every individual has the responsibility in building a better tomorrow... <br /><br />You have nailed it ma'am :hatsoff: 👏👏👏👏 certain phrases are power packed. Great job<br /><br />Thank you and best wishes.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.