(Reading time: 18 - 36 minutes)

அடுக்தான்கதா யவரி நுவ்வு?(கேக்குறேன்ல யார் நீ?)அழுகையின் ஓலம் மட்டுமே என்னிடம்.வற்றியதாக நினைத்த அந்த கண்ணீர் மீண்டும்  கரைபுரண்டோடியது என் கன்னங்களில்.ஏனெனில் வந்திருப்பவன் மனிதனா?மற்றுமொரு மனித மிருகமா?அல்லது அருவமா என்று தெரியவில்லை.

அந்தக் கணீர் குரலை கேட்டபின் நாவெலவில்லை வாய்த்திறக்க......காரணம் அவன் பேசிய பாஷயை புரிந்துகொள்ள என் புத்திக்கு எட்டவில்லை....ஆடைகளின் அடைக்கலம் தேடி நிற்கும் அங்கத்தோடு நிமிர துணிவில்லை.ஏதுமற்ற நிலையில் அழுகை அழுகை அழுகை மட்டுமே......

மரத்தாலான சுவரில் புதைந்து போகுமளவிற்கு ஒன்றி கிடந்த என்னை நோக்கி அந்த பாதங்கள் அடியெடுத்து வைக்க தவணை முறையில் சுவாசம் பெற்றது என் நுரையீரல்கள்......

அருகே வர விருப்பமின்மையை தெரிவிக்க வார்த்தை பிடிபடவில்லை மாறாக பெருங்குரலெடுத்து அழுகை வெடித்தது.என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை அந்த பாதங்கள் அடியெடுத்து முன்னேறும் சத்தம் கேட்கவில்லை.சட்டென படிந்த நிசப்தம் உணர சில நொடிகள் பிடித்தது.

மெல்ல தலையை உயர்த்தி திரும்பி பார்த்தேன்.ஒரு குச்சியின் முனையில் மேல்சட்டை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது.

வானத்தில் பறக்கத்துடிக்கும் சிறு பறவை இறகை தூக்க முயல்வதைப் போல மெல்ல இமைகளை உயர்த்தி பார்த்தேன்.குச்சியின் மறுமுனையை பிடித்துக்கொண்டு எதிர்திசை நோக்கி நின்றான் ஒரு மனிதன்.

நிச்சயம் திடகாத்திரமான ஆண்மகனின் உடலைப்பு கொண்ட அந்த இளைஞன் அவனது மேல் சட்டையை என்னிடம் நீட்டியவாறு சிலையென நின்றான்.நான் காண்பது மூளையை எட்டும் முன் என் கைகள் அனிச்சை செயலாக அந்த துணியை எடுத்து அங்கம் மறைத்தது.இது கனவாக இருக்கவேண்டாமென அவசர கதியில் ஒரு எண்ணம் சாலையை கடக்கும் பயணிபோல மனதில் தோன்றிமறைந்தது.

யவரம்மா நுவ்வு?இக்கட எமி செஸ்த்துன்னாரு?

அவரின் குரலில் இருந்த ஏதோவொன்று என்னை கவனிக்க செய்தது.ஆனால் மொழி புரியாமல் விழித்துக்கொண்டிருந்த நான் அழுகையை மட்டுமே பதிலாக்க அவர் குரலின் சத்தம் உயர்ந்தது.stop crying.tell me who are you? where are  you from?

மேலண்ணத்தில் ஒட்டிய நாக்கை பிரித்து help..... help me......சார் சார் காப்பாதுங்க சார்.

ஓ தமிழா? அவர் நின்ற இடத்திலிருந்தே என்னை நோக்கி திரும்பி நின்றார்.

ஆமா சார்.உங்களுக்கு தமிழ் தெரியுமா?கொஞ்ச நேரம் முன்னாடி வேற பாஷையில்

6 comments

  • [quote name=&quot;madhumathi9&quot;]wow arumaiyaana theerppu :hatsoff: (y) :clap: :thnkx: & :GL:[/quote]<br />Thanks madhu
  • பதினைந்து நிமிடத்திற்கொரு கற்பழிப்பு நடக்கிற இந்த நாளில் இந்த நாட்டில், பெண்கள் ஆயுதம் தாங்கி ஆண்களை அடக்க<br />வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பொறுத்தது போதும், பொங்கி எழு, தாய்க்குலமே!
  • Pengalukku yen indha aniti :angry: <br /> :hatsoff: to saki's bravery 👏👏👏👏 her struggle to defend herself with so much of pain is simply superb 👌<br /><br />Nambikai-in karam nittum mithran dev, :hatsoff: to his timely, assuring, supportive and motivating words. Ivargalai pole Nala ulangal vazhga!!👍 Let everyone be like this.<br /><br />Lastly immediate action towards those demons was perfect end 3:) <br /><br />With the increasing number of cases self defence is the best option but that alone is not enough. It is already too late to take the right measures in protecting our society from this evil act. <br />Every individual has the responsibility in building a better tomorrow... <br /><br />You have nailed it ma'am :hatsoff: 👏👏👏👏 certain phrases are power packed. Great job<br /><br />Thank you and best wishes.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.