ஆப்ரேஷன் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் சம்மதப்பட்ட முக்கிய குற்றவாளிகளை கண்டறிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தின் பேரில் கடந்த இருபத்தினான்கு மணிநேரத்தில் பத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தொலைக்காட்சி திரையில் சகியின் நண்பனான அசிஸ்டெண்ட் கமிஷ்னர் குற்றவாளிகளை கைது செய்து அழைத்துவரும் காணொளி ஓடியது.
சாகித்யாவின் விழியோரம் மெல்ல வழிந்தது நீர் ஆனால் இம்முறை ஆனந்தத்தில்.
சகி நீ அழுதது போதும் நீ குடுத்த அந்த பெட்டியில் இருந்த பென்ட்ரைவ்னால் பெரிய கும்பல் சிக்கிருக்கு.
நீ இனி எப்போமே அழக்கூடாது.பொண்ணுங்க பலவீனமானவங்கனு யாரு சொன்னா....உனக்குள் இருக்குற தைரியம் ஒவ்வொரு பொண்ணுங்ககிட்டேயும் இருக்கனும் சகி.எவ்ளோ கஷ்டத்திலும் போராடிய உன் தைரியம் எப்போவும் உன்கிட்ட இருக்கனும்.
நடந்தது ஒரு சோதனை உன் மனவலிமையை சோதிக்க.அதேமாறி நிறைய இருக்கும் இந்த வாழ்க்கையில.
அன்னைக்கு அப்படியொரு சூழ்நிலையில் என்மேல நீ நம்பிக்கை வச்ச.அந்த நம்பிக்கை எப்போவும் பொய் ஆகாது.புதிய தொடக்கம் உனக்காக காத்திருக்கு.சீக்கிரம் குணமாகி வா.உன் வாழ்க்கையில கடைசிவரை அப்பா அண்ணன் தம்பி இப்படி எந்த உறவாகவும் இருக்கமாட்டேன்.
ஆனால் நிச்சயம் அன்னைக்கு உனக்கு கொடுத்த வாக்குபோல ஒரு மித்ரனா உன்கூட எப்போவும் துணையா இருப்பேன்.
என்ன சரியா?
துரோகங்கள் நிறைந்த ஆண்மகன்களை (அப்படித்தான் நினைத்திருந்தேன்)மட்டுமே கடந்துவந்த என் வாழ்வில் முதன் முறையாக ஒரு ஆணைக் காண்கிறேன்.சிறுவயதில் இருந்து என்னை ரட்சித்த என் அன்னையே ஒரு ஆண்மகன் வடிவில் வந்து நிற்கிறாரோ.......யுத்தம் நடந்த பூமியின் மிச்சங்களின் நிலையொத்திருந்தது மனது.
கம்பீரம் நிறைந்த ஒரு காவல்துறை அதிகாரியின் உடைக்குள் முதிர்ச்சியடைந்த பெண்ணை காக்கும் மதிக்கும் புரிந்துகொள்ளும் கைகொடுத்து உதவும் உண்மையான மனிதனை கண்டேன்.
இவ்வளவு சோதனைகளை கடந்து வந்தது இப்படியொரு காலம் என் வாழ்வில் வருவதற்காகத் தானோ.......