பேசுனீங்க.இது எந்த இடம் சார்.
இது ஆந்திரா எல்லைக்குட்பட்ட சித்தூர் வனப்பகுதி.
ஆந்திராவா......அடிவயிற்றில் ஒரு கலக்கம்.
ஆமா.நீ எப்பிடி இங்கே அதும் இந்த நேரத்துல.
சார் எனக்கு தெரியல சார்.
என்ன உனக்கு தெரியாதா?உன்னைமாறி பொண்ணுங்களுக்கு இதுதான் தொழிலா இருக்கலாம் அதுக்காக யார் கூப்பிட்டாலும் கூட போய்டுவீங்களா? ச்சீ.......
சகிக்க முடியாத ஒரு அருவருப்பில் அவரின் முகம் கசங்கியது.
என்னமாறி பொண்ணுங்களா?என்ன கூற வருகிறார் என விளங்க எனக்கு சில நொடிகள் தேவைப்பட்டது.புரிந்தபோது ஆத்திரத்திற்கு பதிலாக இவ்வளவுதான என்ற வெறுமையே தோன்றியது.
ஏன் சார் என்னமாறி பொண்ணுங்களுக்கு என்ன சார்?ஒரு பொண்ண பத்தின கணிப்பு அவ்ளோதான் இல்ல.உசிதமில்லா சமயத்தில் ஒருபெண் வீட்டை விட்டு வெளியில் இருந்தால் அவள் தப்பான பொண்ணா சார்? வறண்டிருந்த கண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்தது.
ஏய் அழுகையை நிறுத்து.இப்போ நிறுத்த போறியா இல்லையா?மெல்ல கட்டுக்குள் அடங்கியது அழுகை.
நிமிர்ந்து முழுதாக முதல் முறையாக அந்த இளைஞனின் முகத்தை பார்த்தேன்.முகத்தை தாண்டாத அந்த பார்வை.... ஆராய்ச்சியில் தொக்கி நின்ற கண்கள்.நடுக்கம் இன்னும் தேகத்தில் நாட்டியம் ஆடியது சிலமணிநேரங்களாக நடந்த போராட்டங்களின் தாக்கம் என் மனதிலும் உடலிலும் எதிரொலித்தது.
உடலை குறுக்கி சுவரோடு ஒட்டி இருந்த என்னை நோக்கி அடியெடுத்து வைத்த வேலை சார் ப்ளீஸ் உங்கள கெஞ்சி கேக்குறேன் கிட்ட வராதீங்க என்று கைகூப்பிக் கும்பிட்டேன்.
என்னால முடியல சார்.சத்தியமா முடியல சார்.அதுக்கு பதிலாக என்ன கொன்னு போட்டுருங்க சார்.
என் நடத்தையை பற்றி நிரூபிக்க என்கிட்ட ஏதும் இல்லை.நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை.நீங்க உதவலனாலும் பரவாயில்லை தயவுசெய்து என்னை உங்க வீட்டுல வளர்கிற ஒரு பிராணியா நினைத்து விட்டுடுங்க சார்.
அடிகள் என்னை நோக்கி நகர்ந்து நகர்ந்து அவரின் நிழல் என் மீது கவிழ்ந்த தூரத்தில் நின்றார்.என்னருகில் மண்டியிட்டு அமர்ந்து என் தலை மீது மென்மையாக கைவைத்து வருடி இங்க பாரு.....என்னை பாரும்மா.......
அந்த குரலின் கனிவா....கம்பீரத்தை விடுத்த மென்மையான அழைப்பா.....எதுவென்று