தெரியவில்லை அவரை காண உந்தியது.
இப்போ இந்த சூழ்நிலையில் உன்கூட யாரிருக்க வேணுமென்று உனக்கு தோணுது.....யாரு உனக்கு அரணாக இருக்கனும் நினைக்கிற?
உன்னோட அப்பாவா,அண்ணனா அல்லது தம்பியா?
சின்ன வயசுல இருந்து அம்மா மட்டுமே அதனால் அப்பாவ பற்றி தெரியாது.உடன் பிறந்தவர்கள் யாருமில்லை.நானும் அம்மாவும்தான்.
என்னை நோக்கி உயர்ந்த கரங்கள் ஒரு நொடி தயங்கி பின் என் கன்னங்களில் வழிந்த கண்ணீர் துளிகளை துடைத்து நெற்றியிலும் உதட்டிலும் வழிந்த ரத்தத்தை துடைத்தது.
சரி நீ என்னை உன் மித்ரனா நினைச்சுக்கோ.
அப்படினா?
அப்படினா நண்பன்.சரியா?
அந்த பார்வையிலும் செய்கையிலும் காமம் தென்படவில்லை.கண்கள் கண்ணியம் மீறவில்லை.தொடுகையில் வக்கிரமில்லை.
ம்ம்ம் சரி.
சரி இப்போ உன்னை பத்தி சொல்லு நீ உண்மையை சொல்லும் பட்சத்தில் என்னால முடிந்த உதவிகளை செய்கிறேன்.
சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு...
எங்க ஊரு கள்ளக்குறிச்சி பக்கம் சின்ன கிராமம்.நான் சாகித்யா.நான் குழந்தையா இருக்கும்போதே அப்பா எங்களை விட்டு ஓடிட்டார்.தனியா அம்மா என்னை கஷ்டப்பட்டு கூலிவேலை செய்து வளர்த்தாங்க.
வசதி வாய்ப்புகள் எதும் இல்லைனாலும் கூலிவேலை செய்து எங்கள் வாழ்க்கை நடந்தது.தனியாள ஒரு பெண் அதும் கணவன் இல்லாமல் தனியா இருந்து சமுதாயத்தையும் வக்கிர பிசாசுகளையும் சமாளிக்கிறது எவ்ளோ கஷ்டம் உங்களுக்கு தெரியும் நினைக்கிறேன்.
அம்மா என்னை கஷ்டப்பட்டு 12வது வரை படிக்க வச்சாங்க.அதுக்குமேல அம்மாவால் முடியல .இப்படி போய்ட்டு இருந்த எங்க வாழ்க்கையில் ஒரு ஈட்டி பாய்ந்தது.
அம்மாவுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய் பக்கவாதம் அவங்கள முடக்கிப்போட்டது.எனக்கான சோதனை அங்கிருந்துதான் ஆரம்பிச்சுதுபோல.
அதுக்கப்பறோம் நான் கூலிவேலை செய்து அம்மாவ கவனிக்க ஆரம்பிச்சேன்.ஆனால் அம்மாவோட உடம்பு தேறிய வழியில்லை.அதுனால எனக்கு கல்யாணம் செய்ய முடிவு செய்தாங்க.
அப்போதான் எங்க உறவுக்காரர் ஒருத்தர் ஒரு வரன் பார்த்து சொன்னாரு.வரதட்சணை