உன்னிடமிருந்து செலவுக்கு பணம் வாங்கிக்கிறேன், தர்மா! சந்தோஷமா?"
" சந்தோஷம்தான், ஆனா இனிமேல், கிறுக்குப் பிடித்து அலையாம, ஒழுங்கா நடந்துக்க! அத்தையின் மனம் கோணாமல் நடந்துக்க!"
" அப்படியே செய்கிறேன், தாத்தா!" அனைவரும் சிரித்தபின் கலைந்தனர்!
கல்யாணராமன் சமயம் பார்த்து, தன் கல்யாணப் பேச்சை எழுப்பலாம் என திட்டமிட்டபோது, தேவிகா அவருக்கு யோசனை கூறினாள்!
" மாமா! தர்மன் இந்த வீட்டிலே இருக்கிறவரை, நீங்க நம்ம விஷயத்தை பேசவே பேசாதீங்க!
முதல்லே, அவனுக்கு ஒரு நல்ல வேலை, அடுத்தது அவன் கல்யாணம்! பிறகுதான் நம்ம கல்யாணத்துக்கு அவங்க சம்மதம் தருவாங்க!"
" தேவி! பிரமாதமான யோசனை! மூணே மாசத்தில் இரண்டையும் முடிச்சிடறேன், அப்புறம், நமக்கு ஜாலிதான்"
" ஜாலியோட லாலி!" இருவரும் சிரித்த சத்தம் கேட்டு, தர்மன் அங்கு வந்தான்.
" அப்பா! அங்கே என்ன குலாவல்? உங்க வயசுக்கேற்றபடி நடந்துக்க, பழகிக்குங்க! தேவிகாவுக்கு கல்யாணமாகி, இன்னொருவர் வீட்டுக்குப் போகவேண்டியவள்!"
" ஏன் இன்னொருத்தர் வீட்டுக்குப் போகணும், தர்மா?"
" என்ன சொல்றே, அத்தே?"
" அண்ணே! நீயே பதில் சொல்லு!" கல்யாணராமன் விழித்தார். கைகொடுத்தவள் தேவிகா!
" மாமா! இந்த வீட்டு மருமகளாகவே என்னை அம்மா, ஆக்கிட்டாங்க!"
" தேவி! உனக்கு ஓ.கே.ன்னா, எனக்கு டபுள் ஓ.கே."
இந்த வார்த்தையை தர்மன் சொல்லப் போகிறான் என எதிர்பார்த்த கோமதி, தன் அண்ணன் சொன்னதும், அதிர்ச்சியில் உறைந்தாள்.
தர்மனும்தான்! இதுதான் தருணமென தேவி மாமாவின் அருகில் நின்றாள்.
தர்மன் தலையில் அடித்துக் கொண்டான்.
" அப்பா! உனக்கு இரண்டாம் கல்யாணம் செய்துக்கிற ஆசையை பத்து வருஷம் முன்பு சொல்லியிருந்தால், அத்தை அதுக்கு தகுந்த பெண்ணாக பார்த்து செய்துவைத்திருப்பாங்க! இப்ப, டூ லேட்!"
" பைத்தியம்! நானும் தேவியும் தமாஷ் பண்ணினோம், அவ நான் வளர்த்த குழந்தைடா! அவளுக்கு, நல்ல பையனாகப் பார்த்து உரிய காலத்திலே, நானே கல்யாணம் செய்து வைக்கிறேன், இப்ப முதல்லே, உன் கல்யாணம்!"