மாறாக, அந்த ரெண்டு பேருக்கோ, ரொம்ப லேட் ஆயிடுத்து!
ஒருத்தருக்கு ஐம்பது வயது, அடுத்தவருக்கு அவரை விட ஏழு வயது குறைவு!
இருவருமே, தர்மா! ஒருவர் உனக்காகவும், அடுத்தவர் எனக்காகவும் அந்த சிந்தனையே இல்லாம தங்கள் நலனை தியாகம் பண்ணிவிட்டு நாட்களை கடத்திவிட்டாங்க!
ஆனா, இனிமேல்தான், அந்த ரெண்டு பேருக்குமே ஒரு துணை அவசியம் தேவை!
தர்மா! உன் வேலையிலே உனக்கு வெளியூர், வெளிநாடு போகிற அவசியம் ஏற்படலாம்!
எனக்கு கல்யாணமானா, நான் என் புருஷன் வீடு போய் விடுவேன்!
அப்போது, மாமாவும் அம்மாவும் தனிமையில் தள்ளப்பட்டு, பைத்தியம் பிடித்தாற்போல, ஆயிடுவாங்க
நீயோ, நானோ, நம்ம வாழ்க்கையைத்தான் முக்கியமா நினைப்போம், இவங்களைப்பற்றி கவலைப் படமாட்டோம்!
சமீபத்திலே, நான் ஒரு செய்யக்கூடாத தவறை செய்துவிட்டேன்....."
மூவரும் திடுக்கிட்டனர். அப்படியென்ன தவறு அவள் செய்திருப்பாள் என அவர்களால் ஊகிக்க முடிய வில்லை!
" அந்த தவறு என்ன என்று சொல்றேன், நான் வேற காரணத்துக்காக சொல்லியிருந்தாலும், அதன் விளைவு இதுதான்:
மாமா மனசிலே, இருபது வருஷமா இல்லாமல் இருந்த தாம்பத்ய ஆசையை தூண்டிவிட்டுவிட்டேன்......
தெளிந்த நீரோடையில் கல் எறிந்தா மாதிரி!
அது, இப்போ வேகமா வேலை செய்து அவர் நிம்மதி பறிபோயிடுத்து!
தர்மா! உனக்கும் எங்க அம்மாவுக்கும் நான் மாமாவை கல்யாணம் செய்துகொள்ளக் கூடாதுங்கற எண்ணமிருந்தா உடனடியா, மாமாவுக்குப் பொருத்தமானவளா பார்த்து கல்யாணம் செய்துவை! ஒரு மாதம் அவகாசம் தரேன்!
இப்ப, எங்கம்மா நிலமையை யோசிப்போம்!
நம்ம மூணு பேருக்கும் கல்யாணமாகி அவரவர் தனியா வாழத் தொடங்கிட்டா, அம்மாவின் தனிமையை நினைத்துப்பார்!
அவளும், எனக்காக, மனதை கல்லாக்கிக்கொண்டு வாழ்ந்து வருகிறாள்.
மகா கொடுமை! காலம் மாறிப்போச்சு! ஆணோ, பெண்ணோ, எந்த வயதிலும் துணை தேடும் அவசியத்துக்கு தள்ளப்பட்டு இருக்காங்க!
அதனாலே, நம்ம கடமை, அம்மாவின் மறுமண ஏற்பாட்டை செய்தாகணும்!