தர்மா! இந்த ஒரு மாத அவகாசத்திலே, உங்க அப்பாவுக்கு நீ தகுந்தவளா பார்த்து கல்யாணம் செய்து வைக்கலேன்னா, எனக்கு வேறவழி தெரியலே, நானே மாமாவை கல்யாணம் செய்து கொள்வேன், இது உறுதி!
மாமா! நீங்களும் உங்க மனசிலே உள்ளதை ஒளிவு, மறைவில்லாம, பேசுங்க!
இந்த ஆசை ஒன்றும் காமத்தைச் சேர்ந்தது அல்ல, இயற்கையானது!
என் முடிவிலே நான் உறுதியா இருக்கிறேன், ஒரே மாதம்தான் பொறுத்திருப்பேன்..........
மாமா! நீங்களும், உங்களுக்கு தகுந்தவளையும் அதேபோல, எங்கம்மாவுக்கு ஒரு தகுந்தவனையும் தேடுங்க!
மறந்துடாதீங்க! ஒரு காலகட்டத்திலே, அவரவர் வாழ்க்கை அவரவர் பொறுப்பு என்றாகிவிடும்!
ஒரு 'துணை'அவசியம்! தர்மா! இது நாம், நம்மை வளர்த்தவங்களுக்கு செய்ய வேண்டிய கடமை!......."
மழையெனப் பொழிந்த உரையும் அது தந்த சவாலும் காலக்கெடுவும், மூவர் மனதையும் தீவிரமாக உலுக்கியது!