வடை இருக்கு, பத்து ரூவாய்க்கு தராரு, ஓட்டல்ல இதன் விலையை இப்ப அதிகமாக்கிட்டாங்க, ஏன்னா ரெண்டு மாசமா ஓட்டல் மூடியிருந்த காரணத்தாலே ரொம்ப நஷ்டமாம், அதை சரிக்கட்டணுமாம், அதனால இதன் விலை ஓட்டல்ல, ஐம்பது ரூவா! எங்களால தர முடியுமா?
இவர் எங்களுக்காக குறைந்த விலைல தராரு, ஆனா இவர் இதை விற்கறது ஓட்டல்காரனுக்கு தெரிந்தா அவன் ஹெல்த் ஆபீஸரை அனுப்பி, போலீஸ் வந்து கடையை மூடவைச்சிடுவா அதனால, இதை ரகசியமா வைச்சுக்குங்க......"
உடனே ஓடி சிவாவைப் பார்த்து கை குலுக்கிவிட்டு, " எப்படி உன்னால மட்டும் மலிவா கொடுக்க முடியுது?" எனக் கேட்டேன்.
" வீட்டிலே நிறைய செய்கிறபோது, அடக்கவிலை கம்மி! நான் லாபத்தையும் தள்ளிட்டேன், ஏன்னா, அந்த ஏழைங்க இப்ப வேலையேதும் இல்லாம வறுமையில கஷ்டப் படறாங்க!
ரெண்டு, மூணு மாசத்திலே, கொஞ்சம் நிலமை சீராகும், அப்ப, ஒரு அஞ்சு ரூவா விலையேற்றினா ஏத்துப்பாங்க.....
முக்கியமா ஒண்ணு! போலீஸ் கண்ணிலே மண்ணை தூவத்தான், சிகரெட் பேக்கட்களை அடுக்கி வச்சிருக்கேன், ஆனா அதனுள்ளே, சிகரெட் இல்லே, நானே வரவங்களை உங்க கடைக்கு அனுப்பிடறேன், சரியா?"
" டபுள் சரி!" இறைவா! உன் கருணையே கருணை! என்னை பெரிய நெருக்கடியிலிருந்து இப்படி காப்பாத்துவேன்னு நான் நினைத்தே பார்க்கலே, ..