சங்கத்திலே முடிவு எடுத்திருக்கில்லே, இன்னும் ஒரு மாசத்துக்கு வெளியாள் யாரையும் உள்ளே விடக் கூடாதுன்னு, உங்களுக்கு மட்டும் விதிவிலக்கா?"
" எங்க வீட்டுக்கு வர, உங்க சங்கத்தின் அனுமதி வேணுமா, எந்த சட்டத்திலே சொல்லியிருக்கு...?"
" அதைக் கேட்கிறதுக்கு உனக்கு உரிமை இல்லே, உன் வீட்டு ஓனரை அனுப்பு. பதில் சொல்றோம் அவருக்கு"
"வீட்டு வாடகை கொடுப்பது நான்....."
" எங்கே கொடுத்தீங்க, ரெண்டு மாச வாடகை தர முடியாதுன்னு நீங்க சொல்லி விட்டதா, உங்க ஓனர் அழுது விட்டுப் போறாரு, நேற்று!"
" அது எங்களுக்குள்ளே உள்ள பிரச்னை! அதை நீங்க கேட்கமுடியாது......"
" நல்ல கதையா இருக்கே! உங்க வாடகைப் பணத்திலே தானே, ஓனர் சங்கத்துக்கு மாதசந்தா கட்டறாரு, உங்க ஓனர்!ரெண்டு மாச சந்தா பாக்கி! ஏன்னா, நீங்க வாடகை தரலே....சரிசரி, செக்யூரிடி! முதல்லே, அந்த வேலைக்காரியை வெளியிலே அனுப்பு!"
என்னை அடித்து விரட்ட செக்யூரிடி தயாராவதற்குள், நான் கேட்டுக்கு வெளியே வந்து நின்றேன்.
" தலைவர் ஐயா! ஒரு நிமிஷம்! தினமும் ஊரடங்கு இருக்கும்போதே, வீட்டுக்கு வீடு பால்காரன், பேப்பர் போடற பையன், வந்துபோற போது அவங்க மூலமா வராத நோய் எங்க மூலமா மட்டும் வருமா? நியாயமா நீங்க பேசறது? இது எங்க வயத்துப் பொழப்பையா, இரக்கம் காட்டுங்கையா....."
அவர் என்னை முறைத்து விட்டு, பதில் பேசாமல், உள்ளே போனதும், என்னை வேலைக்கு வரச்சொன்ன மகராசனும் கையை விரித்து விட்டுப் போனார்.
எத்தனையோ ஆசைகள் மனதிற்குள் வளர்த்துக் கொண்டிருந்த செக்யூரிடியும் பரிதாபமாக என்னைப் பார்த்தான்!
" தங்கச்சி! இதுதான் நம்ம நாடு! 'தனியொருவனுக்கு உணவிலையெனில் செகத்தினை அழித்திடுவோம்'னு பாரதியார் பாடின நாடு!
லட்சக் கணக்கான கூலித் தொழிலாளர்கள் பசி, பட்டினியோட, தங்கள் பிறந்த ஊருக்கு கால்நடையாகவே நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம், குழந்தைங்கள் பெட்டி படுக்கையோட தினம் நடந்தே சாகறாங்க., உன்னைப்போல ஏழைங்க சொந்த ஊரிலேயே பட்டினியிலே சாகறீங்க, இந்த அநீதியை தெரிந்த படித்த அறிவாளிங்க, வாயை மூடிக்கிட்டு தாங்கள் நல்லா வாழ்ந்தா போதும்னு நினைக் கிற வரையிலும், உனக்கு நீயே துணை! பாவம், நீ என்ன செய்வே, மேல இருக்கறதா நம்பற அந்தக் கடவுளைத் தவிர உனக்கு வேறு யார் துணை?......"
வழியோட போகிறவன் சொன்ன இந்த வார்த்தைகள் உங்க காதிலே விழுந்திருக்குமே, எழுந்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்க, போங்க!
-----------------------------