”அங்க என்ன சிக்னல் தர்ற உன் பாவப்பட்ட முகத்தைப் பார்த்து யார் வேணா ஏமாறலாம், நான் ஏமாறமாட்டேன், நாளைக்கு காலையில ரெடியாயிரு உன்னை கூட்டிட்டு ஆஸ்பிட்டலுக்கு போறேன்”
”நான் வரமாட்டேன்”
”நீ வர”
“மாட்டேன்”
”வந்துதான் ஆகனும்”
”ம்ஹூம்”
”ஏய்” என அதட்ட அவனோ சற்று அமைதியாகி
”வரேன்” என்றான் ஈனமாக அதைக்கேட்டு மலரும்
”சரி போ எனக்கு பிடிச்சதை செஞ்சி கொண்டா, காலையில எனக்கு பால் தராம போனல்ல நீ, அதுக்கான தண்டனை இதுதான்”
”அதுக்கு டின்னர் தரனுமா வேணும்னா பால் கொண்டு வந்து தரவா”
”ஒண்ணும் வேணாம் டின்னர் செஞ்சி கொண்டா” என சொல்லிவிட்டு தனக்கு பிடித்ததை சொல்லிவிட்டு அவள் சென்றுவிட வைதேகியோ அசந்துவிட்டார்
”இந்த டாக்டரம்மா ரொம்ப அதிகாரமா இருக்காங்களே” என சொல்ல சந்தியாவோ
”வைதேகி அவள் என் பொண்ணுதான், இவ்ளோநேரம் அவளைபத்திதான் பேசிக்கிட்டு