”சரிங்க மலரப்பா” என சொல்ல
”டேய் மாமான்னு கூப்பிடுன்னு எத்தனை முறை சொல்றேன் எப்ப பாரு மலரப்பா மலரப்பான்னு கூப்பிடற“
”அப்படியாச்சும் அப்பான்னு கூப்பிட முடியுதே” என்றான் அதைக் கேட்டு ரவியோ பெருமூச்சுவிட்டு அவனின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு கிளம்பினார்.
அடுத்து வைதேகி பள்ளிக்கு செல்ல ரெடியாகி வர கூடவே மலரும் சரவணனும் வந்தார்கள்
”நாளைக்கு நியூ இயர் வருதே, ஏதாவது ஷாப்பிங் செய்யனும்னா அதை முடிச்சிட்டு வாங்க டின்னரை நான் செய்றேன்” என வைதேகி சொல்ல அதற்கு மலரோ
”ஆன்ட்டி நீங்களும் எங்களோட வாங்க, ஒண்ணா ஷாப்பிங் முடிக்கலாம் அப்படியே புது வருஷத்தை கொண்டாடலாம்” என சொல்ல ரவியும் அந்நேரம் வெளியே வந்தார் கூடவே சந்தியா, வந்தவர் தன் மகளைக் கண்டு
”என்னம்மா மலரு நாளைக்கு நியூ இயராச்சே ஏதாவது ஸ்பெஷல் இருக்கா”
”நிறைய இருக்கும்மா நீயும் எங்களோட கலந்துக்கயேன் நாங்க ஈவ்னிங் ஷாப்பிங் போறோம் வர்றியாம்மா”
”அதுக்கென்ன வரேன்” என சொல்லிவிட்டு ரவியை பார்த்து
”ஏங்க நான் போலாம்ங்களா”
”வரேன்னு சத்தமா சொல்லிட்டு அப்புறம் எதுக்கு என்கிட்ட அனுமதி கேட்கற போ போய் தொலை”