(Reading time: 12 - 24 minutes)

 

'ன்ன மாதவன் என்னாச்சு உங்களுக்கு? யு லுக் வெரி ஸ்மார்ட் உங்க நடை பேச்சு எல்லாமே மாறிப்போச்சு அலுவலகத்தில் பலர் சொல்ல துவங்க அவனுக்கே வியப்பாய் இருந்தது... ஒரு பெண்ணின் காதலுக்கு இத்தனை சக்தியா?

இது என்ன பைத்தியக்காரத்தனம் அவனுக்கே புரியவில்லை. மாடியிலிருந்து அவ்வப்போது கேட்கும் அவள் கொலுசொலியிலேயே அவன் கவனம் மொத்தமும் இருப்பதை அவனாலே நம்ப முடியவில்லை. அந்த கொலுசொலி கீழே இறங்கி வராதா என்று அவன் மனம் தவிப்பதை அவனாலே தவிர்க்க முடியவில்லை. இறங்கி வந்துவிடமாட்டாயா கண்மணி யோசித்தபடியே தனது கட்டிலில் படுத்திருந்தான் அவன்.

மாடியில் கண்களை மூடி படுத்துக்கிடந்தாள் அவள். அப்போது  கீழிருந்து அவள் காதில் வந்து விழுந்தது அந்த வயலின் இசை

பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை

சட்டென எழுந்து அமர்ந்தாள் அவள். வாசிப்பது அவனா? அவளுக்காக வாசிக்கிறானா அவன்.?

கண்டு வந்து சொல்வதற்கு  காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை

கண்களை மூடி தன்னை மறந்து வாசித்துக்கொண்டிருந்தான் அவன். இத்தனை நாளாய் அவனுக்குள்ளே உறங்கிப்போயிருந்த இசையும், காதலும் தன்னம்பிக்கையும் மெல்ல மெல்ல விழித்துக்கொள்ள துவங்கி இருந்தன.

மெல்ல கீழே இறங்கினாள் சுப்ரஜா. அவன் எதிரே வந்து நின்றாள். அவள் கொலுசொலியில் கண் திறந்தவனின் விரல்கள் வாசிப்பை நிறுத்தவில்லை.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை

கெஞ்சலான பார்வையுடன் அவன் வாசித்து முடிக்க அவள் கண்களில் நீர் சேர்ந்திருந்தது. அவள் முகத்தையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தவன், வயலினை வைத்து விட்டு அவளை நோக்கி கைநீட்டி அழைக்க ஓடி வந்து அவன் தோள்களில் சரணடைந்தாள் சுப்ரஜா.

This is entry #19 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.