(Reading time: 8 - 16 minutes)

 

ட்டி  வைக்கலன்னா, இவரு ஓடிருவாரு. . . கொஞ்சம் மண்டைக்கு சரியில்லாதவரு” என்று சொல்ல,

சரிம்மா. . . கொஞ்சம் தண்ணீர்; கொண்டு வாங்க, அந்த அம்மா உள்ளே செல்ல,

ஏட்டையா அந்த தாத்தாவை எழுப்பினார். “அய்யா. . . அய்யா. . .”

லேசாக கண் திறந்து  “யாருப்பா. . .”

“என்ன தெரியுதா. . .. ” எனக்கேற்க

ஏட்டையாவின் முகத்துக்கு பக்கத்தில் வந்து

“தெரியுது சாமி நீங்க தான ஆட்டோவுல ஏத்தி விட்டிங்க”.

“அது சரி. . ஏன் வீட்டை விட்டு ஓடி போறீங்க. . ”

“அது லூசு சார்” என்றாள் அந்த அம்மா.

“இவதான் லூசு. இவ புருசன் லூசு. என்ன கட்டி வச்சி சித்ரவதை பண்ணுறாங்க பாருங்க இவங்க தான் பைத்தியம். இது வீடா. . . சுடுகாடு” என பெரியவர் பேசிக்கொண்டே போக, ஒருவர் உள்ளே வந்து  

“சார் வணக்கம்  சார். நான் தான் ரவி, அவரோட பையன்”.

“உங்கப்பாவ ஏன் இப்படி கட்டி வச்சிருக்கீங்க. . ?”

“சார் எங்கப்பன்னா எனக்கு உயிர் சார். அவர் தான் கடவுள் என்ன வளர்த்து ஆளாக்குனது அவருதான். ஏன்னு தெரியல சார் வீட்டை விட்டு ஓடுறாரு, அதான் கட்டி வச்சிருக்கேன்.”

“ஓ.கே.! நல்லா பாத்துக்கோ” என இருவரும் கிளம்பினோம்.

போகும் வழியில், “வணக்கம் சார், நல்லா இருக்கீங்களா” என ஒருவர் கேட்க. . .

“நல்லாயிருக்கேன்.”

“என்ன விசயமா எங்க ஊருக்கு வந்தீங்க. . .”

“அது ஒண்ணுமில்ல. . . இந்த ஆறு முக தாத்தாவ பாக்க வந்தேன். அவரென்ன பைத்தியமா?”

“இல்ல சார் அவரு நல்லா தெளிவா தான் இருக்காரு. அவரு பேருல நிறைய சொத்திருக்கு. அதான் அவரு எங்கேயும் போயிர கூடாதுன்னு, அந்த ரவி பய கட்டி வச்சிருக்கான்.”

“அப்படியா  கதை!.  எங்கப்பான எனக்கு கடவுள், உயிர்னு சொன்னான்.”

“எல்லாம் பொய் சார்.”

“ஓகேப்பா வாறேன்” என கிளம்பினோம்.

ட்டையா மௌனமாகவே இருந்தார். அடுத்த வாரம் அந்த ஊரில் கோவில் கொடை விழா. இரவு நேரம் ஊரே கோவிலில் கூடியிருந்தது. லெபன் ஏட்டையாவுக்கும், எனக்கும் அங்குதான் டியூட்டி. பைக்கில் என்னை ஏற்றிக்கொண்டு ஆறுமுக தாத்தா வீட்டுக்கு வந்தார்.

தாத்தாவை தவிர வேறாரும் இல்லை. கதவை திறந்தார். தாத்தாவின் கால் சங்கிலியை அவிழ்த்தார். வண்டி புறப்பட்டது. இருவருக்கும் இடையில் தாத்தா.

தாத்தாவை அவரது ரூமில் தங்க வைத்தார்.  தாத்தா கையெடுத்து கும்பிட்டார். மறுநாளே கோவையிலுள்ள தனது நண்பரின் ஆசிரமத்திற்கு கொண்டு போய் விட்டு விட்டு வந்தார்.

சொத்துக்காக கட்டி வைத்து சித்ரவதை செய்யும் ரவியை சட்டமோ, காவல்துறையோ எதுவும் செய்து விட போவதில்லை. ஏதாவது கேட்டால் என் அப்பா என உரிமை கொண்டாடுவான் என்பதை அறிந்து.

அந்த தாத்தாவின் கால் விலங்கை உடைத்து, அவரை கரை சேர்த்த லெபன் ஏட்டையா, என்னை பொறுத்தவரையில் கடவுள்தான். இதனால் அவருக்கு ஒரு ரூபாய் கூட லாபமில்லை.  இருந்தாலும் மனிதநேய அடிப்படையில் அவர் செய்த உதவி பெரிது.

“கடவுள்கள் பூமியில் வாழத்தான் செய்கிறார்கள் லெபன் ஏட்டையா வடிவில்” என புரிந்து கொண்டேன்.

This is entry #46 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.