இந்த காதல் சுகமானது - சஹானி
This is entry #25 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
அறை எங்குமே அமைதி . தன் கையில் இருந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை புரட்டினான் அவன். காலமும் அவன் நினைவோடு தன் பக்கத்தை பின்னோக்கி புரட்டியது.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது என் பள்ளியில் கொடைக்கு டூர் செல்லும் நாளன்று நிகழ்ந்தது.
ஆரம்பத்தில் இருந்தே எனக்கு அவளை மிகவும் பிடிக்கும் அவளின் அந்த கண்கள், அவள் பொதுவாக என்னிடம் பேசும் வார்த்தையானது அதிகம் படிப்பு சம்பந்தமாகவே இருக்கும். ஆனாலும் அவள் மொத்த வகுப்பில் என்னிடம் மட்டும் பேசுவது எனக்குள் ஒரு தன்மையை ஏற்படுத்ததான் செய்யும்.
இருந்தும் அவளிடம் என் காதலை சொல்ல தயக்கம் , அவள் அதன் பின் என்னிடம் பேசாது போய் விட்டால் ?
அவளிடம் நான் பேசும் இந்த சைன் காஸ் போன்ற பேச்சே எனக்கு போதும் என்று.
ஒரு நாள் மதிய உணவு இடைவெளியில் அவள் என்னிடம்,"இந்த ட்ரிப்க்கு நீ வரல்ல..." எனக்கேட்டாள்.
என்ன கான்ஃபிடன்ஸ் என் மேல் என்னை வா என்று அழைக்காமல், வருவாயா? என்று கேள்வி எழுப்பாமல் என்னிடம் கெஞ்சும் அவளின் கண்கள் , இதற்காகவே நான் போக வேண்டும் என்ற முடிவில் கிளம்பிவிட்டேன்,
சுற்றி உள்ளவர்களின் தூண்டலால், அவளிடம் என் காதலை சொல்ல செல்கிறேன்.....
அங்குள்ள சில பூக்களை பறித்து அவளின் முன்பு நான் நீட்ட அவ்வளவு தான் பதில் ஏதும் சொல்லாமல், ஓடி விட்டாள். என்னால் தாங்க முடிய வில்லை ...அடுத்து நாங்கள் வீடு திரும்பும் வரையுமே அவள் என்னை பார்க்கவே இல்லை சரி நாளை அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணியவாறு நாளைய பொழுதில் நான் பள்ளி செல்ல அவள் வரவில்லை . அன்று மட்டும் இல்லாது ஒரு வாரம் வரவே இல்லை ,அவள் தோழியிடம் காரணம் கேட்டால், சிரித்து கொண்டே மழுப்பி விட்டாள்.
சில நாட்களுக்கு பிறகு அவளை நான் காண எனக்கு ஆச்சர்யம் !
ஆம், துள்ளி குதித்து கொண்டு வரும் அவள் பாதங்கள் இன்று ரோஜா இதழ் பட்ட பனி போல் மெல்ல நடையிட்டு வருகின்றது... அவளுக்குள் பெண்மை வந்து விட்டது என்பதை நானாய் அறிந்து கொண்டேன்.
அன்று மதிய உணவு இடை வேளையில் அவளிடம் நான் பேச நெருங்க அன்றைய நாளின் இரண்டாவது ஆச்சர்யம்...
எப்போதும் அவள் இதழுக்கு முன் அவள் விழியே என்னிடம் பேசும் ஆனால், இன்று அவள் விழிகள் என்னை தூரம் ஒதுக்கி வைத்தது . மீண்டும் அவள் என்னிடம் பேசாமல் விலகி ஓடினாள். துடித்து விட்டேன்.. இப்படியே பள்ளியை விட்டு நின்று விடலாமா என்று... மேலும் அன்று என்னை உசுப்பேற்றிய நண்பனை கொன்றால் தேவலாம் என்றத என் மனம்.
ஆனாலும் அவளை பார்த்து கொண்டே என் மிஞ்சிய காலத்தை தள்ளினேன்.
வருடங்கள் இரண்டு கடக்க..
பதினொன்றாம் வகுப்பின் சேர்க்கை மிக தாமதமாகவே நடை பெறும் எங்கள் பள்ளியில். நாங்கள் இருவருமே முதல் க்ரூப்பை தேர்வு செய்தது கடவுள் செயலே.. இதற்காக கடவுளுக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் என் மகிழ்ச்சி தீராது.
பின்னே வேறு வேறு பிரிவு எடுத்து வகுப்பில் சில நேரங்களிலாவது அவளை காணும் சந்தோசத்தை யாராவது தட்டி பறித்து கொண்டுவிட்டால்?
வகுப்புகள் தொடங்கிய சில காலத்தில் ,
இந்த நாள்... அவள் மீண்டும் என்னிடம் பேசிய நாள்...
இருவருமே மூன்றாவது இருக்கையின் முனையில்...
இயற்பியல் ஆசிரியர், நேற்றைய பாடத்தின் முக்கிய கேள்வியை அவளிடம் கேட்க .... அவள் முழித்த முழியில், எனக்கு சிரிப்பு தான் வந்தது...
ஆம் , நேற்றைய தினம் அவள் வகுப்புக்கு வரவில்லையே... மேலும் இந்த ஆசிரியரின் பிரிவு மதிய உணவின் போது தான்... அந்த கால இடைவேளையில் படித்து விடலாம் என்று எண்ணி கொண்டிருந்தவளுக்கு இப்படி திடீர் ஷாக் கொடுத்தால்... பாவம் அழுதே விட்டாள்.
வழக்கம் போல் மதிய உணவு இடைவேளையில் அவளை காண வெகு சீக்கிரமே வந்து விட்டேன். இன்னமும் அழுது கொண்டு தான் இருக்கிறாள்.
படபடத்த இதயத்துடன் அவளை நெருங்கி... " இதுக்கு போய் யாராவது அழுவாங்களா எனக்கேட்டேன்.
"இல்ல, நேத்து அம்மாக்கு உடம்பு சரி இல்ல அதான் என்னால வர முடியல அதோட, எப்படியும் இன்னக்கி மதியத்துக்குள்ள படைச்சிடலாம்னு இருந்தேன் .சார் காலைலயே வந்ததும் பயம் வந்துடுச்சு.. அதோட என் கிட்ட கேள்வி கேட்டுற கூடாது கடவுளேனு வேண்டிக்கிட்டு இருக்கும் போதே அவர் என்கிட்ட கேட்டுட்டார்"
குழந்தை போல் பேசும் அவளை என்ன சொல்லி சமாதானம் செய்ய என்று தெரியவில்லை எனக்கு.
"சரி ,இதுக்கு நீ அழுதா எல்லம் சரி ஆய்டுமா என்ன ? அழாம படியேன்"