(Reading time: 6 - 11 minutes)

த்தனை நாள் நான் உங்களை காதலிச்சேன்… நீங்களும் என்னை காதலிச்சீங்கன்னு நினைச்சேன்… ஆனா இன்னைக்குத்தான் தெரியுது என்னை நீங்க காதலிக்கவே இல்லைன்னு… என் மனசுல போன நிமிஷம் வரைக்கும் நீங்க மட்டும் தான் இருந்தீங்க… அதுக்காக அனுமான் மாதிரி நான் நெஞ்சை பிளந்து காட்டணும்னு நீங்க நினைச்சீங்கன்னா என்னால மட்டுமில்ல யாராலேயும் முடியாது… காதல் அப்படிங்கிறது ஒரு புரிதல்… அதுவே உங்களுக்கு சுத்தமா இல்லன்னும் போது இனி என்ன பேசினாலும் ப்ரயோஜனமில்லை…”

“இப்போ முடிவா என்னதான் சொல்லுற?...”

“உங்களால உங்க நட்பு வட்டாரத்தை விட்டு வர முடியாதென்னும்போது, என்னாலயும் என் நட்பை விட்டுகொடுக்க முடியாது… அதும் நான் கஷ்டப்பட்ட ஒவ்வொரு தருணத்திலேயும் எங்கூடவே இருந்து என்னை கலங்காம பார்த்துகிட்ட என் நட்பை என்னால உதறி தள்ளிட்டு வரவே முடியாது…” என்றவள் தீர்க்கமான முடிவோடு

“உங்க மனசுல எழுந்த இந்த சந்தேகம் நாளைக்கு கல்யாணத்துக்குப் பிறகு தொட்டதெற்கெல்லாம் வரும்… வாழ்க்கையே நரகமாகிடும்… காதலிச்சு தான் நாம கல்யாணம் பண்ணினோமான்னு தோண வச்சிடும்… நம்பிக்கையும் புரிதல் இல்லாத காதல் கல்யாணத்துல முடிஞ்சா சத்தியமா அதை விட ஒரு கொடுமையான விஷயம் எந்த பொண்ணுக்கும் நடந்திட முடியாது… நம்ம கல்யாணமும் நடக்காது….” என சொல்லியவள் அவன் கோபத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வீட்டை விட்டு வெளியேறினாள்….

சாலையோரம் அவள் நடந்து செல்வதைப் பார்த்த ரோகித், “ஹேய்… சாயா… என்ன?... இங்க தனியா நடந்து போயிட்டிருக்குற?.. உன்னோட அவரை பார்க்க போறேன்னு தான சொன்ன?... என்னாச்சு?.. பார்த்தீயா?.. பேசினியா?... என்ன சொன்னார் அவர்?.. எப்போ அவரை மீட் பண்ணலாம்?.. சொல்லு… லூசு…” என அவன் கேள்வி கேட்டுக்கொண்டே போக

“நான் உன்னை இப்போ பார்த்ததும் நல்லதாப் போச்சு… உன்னைத் தேடி தான் வந்திட்டிருந்தேன்…” என்றாள் அவள்…

“என்னைத் தேடியா?... எதுக்கு?... சாயா?...”

“என் கல்யாணம் கேன்சல் ஆகிடுச்சு…” என அமைதியாக அவள் சொன்னதும்,

“வாட்?...” என அதிர்ந்தான் அவன்…

“ஆமா ரோகித்… விடு… அவருக்கும் எனக்கும் செட் ஆகாது….” என சொல்லிவிட்டு மெல்ல நடக்க, அவன் அவளின் கையை ஆதரவாய் பிடித்தான்…

அந்த நட்பின் ஸ்பரிசம் உனக்கு எந்த கஷ்டம் வந்த போதிலும் நான் இருக்கிறேன் என கூற, மனம் லேசாகி புன்னகைத்தவள், மெல்ல அவனுடனே கை கோர்த்து நடந்து சென்றாள்…

காலம் முழுவதும் சந்தேகித்து மனதினை கொல்லும் அவனுடன் வாழ்வதை விட, காலம் முழுவதும் நான் காயப்பட்டாலும் என்னை தேற்றும் என் நண்பனுடன் என்றும் நட்பாக இருப்பதே சிறந்தது என்ற முடிவெடுத்து அவனுடன் நடந்தாள் சாகித்யா…

நட்பு என்பது இருபாலருக்கும் சரி சமம் தான்… அதில் என்ன பேதம்?... ஆணென்ன?.. பெண்ணென்ன என்று…

ஹாய் பிரெண்ட்ஸ்… நான் விமலா… இது என்னோட முதல் கதை… படிச்சிட்டு எப்படி எழுதியிருக்கேன்னு சொல்லுங்க…

 

This is entry #85 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.