(Reading time: 11 - 21 minutes)

வங்க ரெண்டு பேரும் லவ் செய்திருக்காங்க..

……………..

அவனும் அதை நம்பியிருந்திருக்கான்……..

………………….

ஒரு நாள் அவளை வேற யாரோடவோ பார்த்தப்போ தான் இவனுக்கு புத்தி வந்திருக்கு, அவளுக்கு ஏகப்பட்ட பாய் பிரண்ட்ஸாம்……..

………………….

உண்மை தெரிஞ்சதனால தான் அதிர்ச்சியில சூசைட் அட்டெம்ட் செய்திருந்திருக்கான்.

………….. சரி இப்போ அதுக்கென்ன…….

என் வைஃப் ப்ரியா அந்த காலேஜ் தான், அதே வருஷம் , அதே க்ளாஸ், அவ அப்பா அதான் எங்க மாமனார் பேர் தங்கராஜ்…..ஸோ T யும் பொருந்தி வருது…..

ம்ம்ம்…………….

எனக்கு விஷயம் தெரிஞ்சதிலிருந்து நிம்மதியே பறிபோயிடுச்சி…………என் மனைவி எப்படில்லாம் இருக்கணும்னு நான் நினைச்சிருந்தேன் தெரியுமா?……….. ஒரு நாள் இல்லை ஒரு நாள் நம்ம பிரண்ட்ஸ் எல்லாரும் எங்கேயாவது வெளியே சேர்ந்து போகும் போது, இல்ல நாம பிரண்ட்ஸ் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க நேரும் போது என் மனைவி பத்தி யாருக்காவது தெரிய வந்தா என் மானமே போயிடும்……….

அதுக்கு……..

அதான் அவளை டிவோர்ஸ் பண்ணிடலான்னு……….

எவனோ ஒருத்தன் எதையோ சொன்னதுக்காக நீ டிவோர்ஸ் வரைப் போயிட்ட, சரி டிவோர்ஸ்க்கு ரீசன் என்ன சொல்லுவ…… வசீகரனின் குரலில் நக்கல் கலந்திருந்ததோ……

நான் எதையாவது சொல்லிட்டுப் போறேன்.

நான் ரீசன் எதுக்கு கேட்டேன்னா, அவ கிட்ட இப்போ எதையாவது தப்பை நீ பார்த்தியா……

இல்லை………..சொன்னவனின் குரல் மெலிந்திருந்தது..

உன்னை விட்டுட்டு ஊர் சுத்தப் போறாளா………..

அவ அம்மாப்பாவை கூட நானா பார்க்க கூட்டிட்டு போனாதான் உண்டு, அவளா எங்கேயும் போறதில்லை.

யாருக்காவது போன் கால், அனாவசியமான பேச்சு?

………………………. அவன் மௌனமே அவன் பதிலைச் சொல்லியது.

சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் நான் உங்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன்

ம்ம்…….கேளு…

நீயும் அந்த அக்ஷயும் காலேஜில சுத்தாத பொண்ணுங்க இல்ல, ஒருத்திய விடாம ஜொள்ளு விடுவீங்க, வீகெண்ட் சுற்றப் போறது……….

டேய் நீ வேற அது நானில்லை…………..நான் கொஞ்சம் ஜொள்ளு விடுவேன் தான் ஆனா வீகெண்ட் சுத்தறது அக்ஷய் தான், எனக்கு அந்தளவு தைரியம் கிடையாது.

ம்ம்……பணமும் கிடையாதுன்னு சொல்லு..

வசீகரனின் நக்கலில் உண்மை இருந்ததால் மௌனம் காத்தான் மகேந்திரன்.

அந்த அக்ஷய் தோற்றம் , பணம் என்று காலேஜிலுள்ள ஒரு சில பெண்களை கவர்ந்து இருந்தான் தான். மாடர்ன் என்றால் இஷ்டம் போல வாழ்வது என்றக் கொள்கைக் கொண்ட ஒரு சிலப் பெண்கள் அவன் தொடர்பில் இருந்தனர். வாழ்க்கை வாழ்வதற்கே என்றக் கொள்கைக் கொண்ட குழு அது. அக்ஷயின் பணம் கொடுத்த கவர்ச்சியில் மகேந்திரனுக்கு அப்போது அவன் குழுவில் இருப்பது மிகப் பிடித்து இருந்தது. அக்ஷயிடம் தேனில் ஈ விழுவது போல தாவும் பெண்கள் இவனிடம் அவ்வளவு ஆர்வம் காட்டியதில்லை. ஆனாலும் ஈயென இளித்துக் கொண்டாவது அவர்கள் கிண்டலைப் பொருட்படுத்தாமல் இவன் அவர்களோடு சேர்ந்து இருப்பான். அதில் அப்போது அப்படி ஒரு பெருமை.

வசீகரனுடன் அவனுடைய நட்பு பள்ளிப் பருவத்தையது. கல்லூரிச் சென்றப் பிறகு மாறிய மகேந்திரனுடைய போக்கு அவனுக்கு பிடிக்காததால் எத்தனையோ முறை அவனை இவன் கண்டித்து இருந்திருக்கிறான். அப்போது என்னவோ வசீகரனின் வார்த்தைகள் அவனுக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்துவதாக தோன்றும். ஆனால், அந்த விஷயத்தை இப்போது எதற்கு கிண்டி கிளறுகிறான் என்று மகேந்திரனுக்கு புரியவில்லை.

நீ இப்போ அதை ஏன் கேட்டுட்டு இருக்கிற வசீ?…

இல்ல ஒரு வேளை உன் மனைவி அந்த பிரபு காதலிச்ச பொண்ணா இல்லாம இருந்து, அவளுக்கு நீ முன்னயெல்லாம் இப்படி பொண்ணுங்க பின்னாடி சுத்துனவன்னு தெரிஞ்சா அவ என்னச் செய்யணும்னு நீ நினைக்கிற?…………

இதில என்ன இருக்கு. நான் என்னடா பெரிய தப்பு பண்ணிட்டேன். இப்போ எல்லா பையனுங்களும் செய்யறது தானடா அது. அதை அவ ஏன் பெரிசுப் படுத்தணும்?. அதான் நான் கல்யாணத்துக்கு பிறகு ராமனா தானே இருக்கேன்………….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.