“எப்போல இருந்துன்னு கேக்காத. எனக்கு சொல்லத்தெரியல. நீ என்னை காலேஜ்ல ஓரப்பார்வை பார்ப்பியே, அப்போவா? இல்லை, காலேஜ் பத்தி நினைக்கும்போதெல்லம் நீ இப்போ எங்க, எப்படி இருக்கன்னு என்னையும் அறியாமல் தவிப்பேனே, அப்போவா? இன்னைக்கு காலையில் என்னை பார்த்து பாடுனியே அப்போவா? தெரியலா. ஆனா, இப்போ, இந்த நிமிஷம் சொல்றேன். நான் உன்ன லவ் பண்றேன். எப்பவும் என்கூட சண்டை போடுட்டே லயிஃப் லாங் என்ன லவ் பண்ண உனக்கு சம்மதமா?”
அவன் கேட்டதைக் கண்டு புன்னகைத்தாள் மெலிதாக அவனது விருந்தா. பின், இன்னும் அவனது தோளில் சாய்ந்துகொண்டு “ம்ம்ம்” என்றாள்.
“ஏன்மா, பட்டிமன்றத்துல மட்டும் தான் வாய்கிழிய பேசுவியா? ரொம்ப அமைதியா இருக்கியே? இப்படி இருந்தா எனக்கு போர் அடிக்குமே” என்று கேட்டான்.
“வைஃப் ஆனதுக்கு அப்புறம் இந்த அமைதி கிடைக்காது. சோ, இப்பவே நல்லா என்ஜாய் பன்னிக்கோங்க” என்றாள்.
“அதுவும் சரிதான்” என அமைதி காத்து அவள் கரத்துடன் கரம் இணைத்தான், இந்த ராதையின் பெயருடையவளின் மனதை கொள்ளை கொண்ட முரளிமனோகரன்.
எங்கிருந்தோ,
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர்த்துளி
உன் மார்பில் சாய்ந்தே சாகத்தோணுதே
ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
விடிந்தாலும் வானம் இருள்பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து கதைபேச வேண்டும்
முடியாத பார்வை நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே
ஓஹோ…. ஓ… ஓ…
ஓஹோ… ஹோ……
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்
காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே
ஓ… ஓ……. ஓ…… ஓ…
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர்த்துளி
உன் மார்பில் சாய்ந்தே சாகத்தோணுதே
என ஹரிஹரனும் சைந்தவியும் இணைந்து இவர்கள் இருவருக்கும் BGM வாசித்துக்கொண்டிருந்தனர். இருவரும் அந்த பாட்டில் வரும் விஜய் – சமந்தா போல நல்வாழ்வு வாழ வேண்டி விடைபெறுவோம்.
{kunena_discuss:785}