(Reading time: 7 - 13 minutes)

தை கேட்டு சமாதானமடைந்த திரிபுரா தனது மனதிற்கினிய பாரதியின் பாட்டை பாட ஆரம்பித்தாள்

மனதிலுறுதி வேண்டும்,

வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்…………………………………

வள் பாடிமுடித்ததும் அனைவரும் அவளை பாராட்டினர். சங்கரன் அவளை பார்த்து, "நல்லா பாடுன பிள்ள. இப்படியே எல்லா நாளும் எங்ககிட்ட வந்து ஒரு பாட்டு பாடி காமிச்சிட்டு தான் தான் கிளாஸ்சுக்கு போகணும்",என மிரட்டினான்.

"சங்கரா பாவம் டா பிள்ளைங்க மொதோ நாள் காலேஜுக்கு வந்திருக்கு மிரட்டவேண்டாம்",என்று சங்கரனை பார்த்தும் ,"நீங்க கிளாசுக்கு போங்க பிள்ளங்களா",என்று பெண்களை பார்த்து சொன்ன பாண்டியை திரிபுராவுக்கு ஏனோ அவனை மிகவும் பிடித்துவிட்டது.

தனது தந்தையும் இது போல் தான் தனது அண்ணன்மார்களிடமிருந்து தன்னை காப்பாற்றுவார் என நினைத்து கொண்டாள் திரிபுரா. அதன் காரணமாய் பாண்டியை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தாள். அந்த புன்னகை தான் அவர்கள் நட்பின் தொடக்கம்.

பாண்டியும் திரிபுராவும் ஒரே பிரிவை எடுத்து படித்ததால் அவர்கள் நட்பு வலுவடைந்தது. அவளது ஒவ்வொரு திறமையை யும் பாண்டி வெளி கொண்டுவந்தான்.    (நமது தந்தையையும் ஆசானையும்  ஒரு நல்ல நட்பின் மூலம் காணலாம் என்பது என் கருத்து)

பாண்டி அதே கல்லூரியில் தனது முதுகலை கல்வியை தொடர்ந்ததால் அவர்களின் நட்பும் அந்த மூன்று வருடம் தொடர்ந்தது.

நம் நூற்றாண்டிலேயே ஆண் பெண் நட்பு சில காலம் மட்டுமே நிலைக்கிறது எனும் பொழுது கடந்த நூற்றாண்டில் அவர்களின் நட்பு எதுவரை??

ல்லூரியின் கடைசி நாள்...

தே ஆலமரத்தடி…

திருமண பத்திரிக்கையுடன் வந்த திரிபுரா அதை பாண்டியிடம் கொடுத்தாள். தனது தோழிக்கு திருமணம் என்றதும் மகிழ்ச்சி அடைந்த பாண்டி,"வாழ்த்துக்கள் சுந்தரி! இப்ப மாறி எப்பவும் சந்தோசமா இருக்கனும் பிள்ள",என்று வாழ்த்தினான்.

பதிலுக்கு அவள் ஒரு காகிதத்தை கொடுத்து விட்டு சென்று விட்டாள், அதில்

சந்திக்கலாம் - இப்படிக்கு சுந்தரி பெண்”,

என்றிருந்தது என்று நிகழ் காலத்திற்கு வந்தார் தாத்தா.

நினைவுகள்... சில நினைவுகள் வேதனை அளிக்கும் சில நினைவுகள் மகிழ்ச்சியை அளிக்கும்... தாத்தாவின் நினைவுகள் ஒரே சமயத்தில் அவருக்கு வேதனையையும் மகிழ்ச்சியையும் அளித்தது...

இந்த வேதனையையும் மகிழ்ச்சியையும் ஒன்றாக கொடுக்கும் நினைவுகள் நட்பின் நினைவுகள் மட்டுமே கொடுக்கும் என்று அந்த நிமிடம் உணர்ந்து கொண்டார் நமது நாயகன் சுந்தரபாண்டியன்.

தாத்தா தனது கடந்த காலத்தை முடிக்கவும் மித்ரனின் பட்டமளிப்பு விழாவிற்கான அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது.

"போலாம் தாத்தா",என அந்த மௌனத்தை கலைத்த மித்ரன் அவரை விழா நடக்கும் அரங்கிற்கு அழைத்து செல்ல ஆரம்பித்தான்.

அந்த ஆலமரத்தை திரும்பி பார்த்து கொண்டே நடந்த அவர் சட்டென்று மீண்டும் அந்த மரத்தை நோக்கி ஓட தொடங்கினார். "தாத்தா..! எங்க போறீங்க?",என்று மித்ரன் மீண்டும் அந்த மரத்தடிக்கு வந்தனர்.

ங்கு, வெள்ளையும் சிகப்பும் கலந்த சுடிதாரில் ஒரு இளம் பெண்ணும், அதே வண்ண சேலையில் கண்ணாடி அந்த பெண்ணின் பாட்டியும் நின்றுகொண்டிருந்தனர். அந்த மூதாட்டியின் விரல்கள் ரொம்ப நேரமாக அந்த பட்டு மரத்தையே வருடி கொடுத்துக் கொண்டிருந்தன.

அவர்கள் இருவரையும் நெருங்கிய தாத்தா அந்த பெண்ணை பார்த்து தன் உயிரை ஒன்று திரட்டி அழைத்தார் "சுந்தரி பெண்ணே...!!!".

 

This is entry #29 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - வசுமதி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.