நான் ரொம்ப பெண்களை மதிக்கிறேன் , உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் போதும், வேற ஒரு பெண்ணோட, தொடர்பில் இருப்பதாக உங்கள் மனைவி சொல்றாங்க.
மனைவி, குழந்தைன்னு குடும்பமாக இருக்கும் ஒரு ஆண், வேற பெண்ணிடம் சென்றால், அவனுக்கே குழந்தை பிறக்கும் என்று இயற்கையில் இருந்தால் இப்படி எல்லாம் செய்விங்களா?
முதலில் பெண்களுக்கு மரியாதை கொடுங்க, அதுவும் மனைவிக்கு முதல் மரியாதை கொடுங்க, இல்லை என்றால் நான் உங்கள் மேல் ஒழுங்கு நடவைக்கை எடுக்க நேரிடும், என மிரட்டி அவர்களை அனுப்பி வைத்தான்.
அவர்கள் சென்றதும், அங்கிருந்த அவளை கண்டு,
ஹே....... வாலு , நீ இங்க என்ன பண்ற?
ம்ம்ம்ம்....... ஊருக்கு தான் உபதேசமெல்லாம் போல, பெண்களுக்கு மரியாதை கொடுக்க சொல்லிட்டு, என்னை, முட்டாள், வாலு ன்னு சொல்றிங்க? நான் பெண் என்பதால் என்னோட ஆஸ்திரேலிய டிரிப்பை நிராகரிசுட்டு , அடுத்திருந்த நவீண் ஒரு ஆண் என்பதால் கொடுத்து இருக்கீங்க!!!!!!
பெயருக்கு ஏற்றால் போல் எப்பவும் என்ன ருத்ர தாண்டவம். முதலில் உட்கார், இந்த தண்ணீர் கொஞ்சம் குடி. என ஆதி கூறினான்.
உன்னை முதலில் பார்த்தவுடன் ஏதோ ரொம்ப நாள் பழகின மாதிரி ஒர் உணர்வு ஏற்பட்டது, அதில் நீ டிவைடர்ல ஏறி தாண்டினதும் , ஒரு அக்கறையால், ஒரு உரிமையால் உன்னை முட்டாள்னு திட்டிட்டேன். சாரி..........
நீ அன்று தாமதமாக வந்த காரணத்தை கேட்ட பொழுது உன் மேல் அதிக மரியாதை வந்தது.
நம்ம மனசுக்கு பிடிச்சவங்க என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்ன்னு நினைத்து சொன்னது தான் அந்த மூளை இருக்கானு கேட்டதும்.........
ஹா......... மனசுக்கு பிடிச்சவங்களா? என ருத்ரா திகைத்தாள். இருந்தாலும் அவன் பெண்களை பற்றி கூறியது கேட்ட பின் அவன் மேல் ஒரு மரியாதை வர தான் செய்தது.
ஆதி, “உன்னோட ஆஸ்திரேலியா வேலையை தடுத்தும், நீ ஒரு பெண் என்பதற்காக இல்லை. உன்னை விட்டு அவ்வளவு நாள் இருக்க முடியாது, என்பதற்காக தான்.
நாம கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமா? என அழகாக பிரப்போஸ் , செய்தான் ஆதி........
சரி என கூறி, ருத்ராவும் அழகாக தலையாட்டினாள்.........a
This is entry #66 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல்
எழுத்தாளர் - பூஜா பாண்டியன்
{kunena_discuss:1083}