“ தப்பில்லையே, அவா ஆத்து பொருப்பேத்துக்காட்டா, ஆம்பிளைகள் நிம்மதியா ஆஃபீஸ்ல வேல பண்ண முடியுமா? அது மட்டுமா வேலைக்கு போற பொண்களுக்கும் இந்த அத்தன வேலையையும் என்ன பொருப்பா எடுத்து செய்யறா? நாம வேலைக்கு போறதையே பெருசா பில்டப் கொடுக்கறோம், ..வேலைக்கு போற லேடீஸ் , ஆத்து வேல வெளி வேல எல்லாத்தையும் இழுத்து போட்டு செய்யறா, அவா ஆல் ரவுண்டறா இருக்கா…...அவாள்ளாம் குடும்பம்ன்ற பாரத்த தங்க தலைல சுமக்கற மந்திரியானோம்! இன் ஃபாக்ட் அவாளத்தான் குடும்பத் தலைவர்ன்னு போடனும்….ஏன்னா அவாளுக்குத்தான் பொருப்பும், வலியும், வேதனையும்…..”
“ நீர் சொல்றது ரொம்ப வாஸ்தவமானது ஓய்…. மனைவி ஒரு மந்திரி ன்ற டைட்டில் ரொம்ப கரக்ட்தான் “
"என் பொண்டாட்டி, ஒரு மந்திரியாங்காணும் (மனைவி ஒரு மந்திரி)
"ஹாஹாஹா ..... என்ன அண்ணா சொல்றீங்கோ? விசித்திரமாணா இருக்கு?"
நீங்களும் அப்படி சொல்லி பாருங்கோ, எவ்ளோ சந்தோஷமா இருக்குன்னு தெரியும்!”
“அப்படியேண்ணா, இனி என் பொண்டாட்டியோட பாதி வேலய பங்கிட்டுக்கறேன்…..”
“ரொம்ப சந்தோஷம் ராஜகோபால்….. நீங்களே உம்ம பொண்டாட்டிய அப்ரிசியேட் பண்ணலேன்னா வேற யார் பண்ணுவா சொல்லுங்கோ பாக்கலாம்”
“கரக்ட்தாண்ணா…….”
நம்மாத்துல மட்டுமில்ல, உலகத்துல எல்லா பொம்மனாட்டிகளும் அவாவா குடும்பத்துக்கு மந்திரி தான் ஓய்”
“நான் ஒத்துக்கறேண்ணா…….. “
குறள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.
This is entry #68 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - மனைவி ஒரு மந்திரி
எழுத்தாளர் - VJG
{kunena_discuss:1083}