(Reading time: 8 - 15 minutes)

ளாகத்திற்குள் விளையாட்டு போட்டி.. 

அந்த வருடம் எங்கள் கல்லூரிக்குள்ளயே மாநிலங்கள் அளவில் அனைத்து கல்லூரிகளும் பங்கேற்கும் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. கல்லூரி நடத்தும் போட்டி என்பதால் லீக் சுற்றுகள் இல்லாமல் கால் இறுதிக்கு சென்ற நமது கல்லூரி மிகவும் கஷ்டப்பட்டு இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இறுதி போட்டி நடக்கும் நாள் போட்டி மிகவும் கடினமானது என முன்னரே கணிக்க முடிந்தது ஏனென்றால் எதிரணியினர் கடந்த வருட சாம்பியன். என் விளையாட்டு மாணவர்கள் உறுதியுடனும் உத்வேகத்துடனும் வெற்றி பெறுவோம் என்று என்னிடம் நம்பிக்கை தெரிவித்தனர். 

அடுத்த நாள் போட்டி ஆரம்பித்து முதல் 30 நிமிடங்களுக்குள் வெற்றி கனவு தள்ளி செல்வதை எதிர் அணியினர் நான்கு கோல்கள் போட்ட பொழுது தான் உணர ஆரம்பித்து, எங்கள் அணி மாணவர்கள் சோர்ந்து விளையாடியதை கண்டு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்பொழுது தான் ஒரு யோசனை தோன்றி நான் பார்வையாளர்களாக இருக்கும் மாணவர்களை அழைத்து நாம் தோல்வியின் விளிம்பிலும் ஜெயிக்க வேண்டுமானால் கல்லூரிக்குள் இருக்கும் அனைத்து மாணவர்களையும் மைதானத்திற்கு வந்து ஆதரவு தர அழைத்து வரக் கூறினேன். இரண்டாம் பாதி ஆரம்பிப்பதற்கு முன் அங்கே மைதானம் நிறைந்த கரகோஷங்கள். எங்கள் அணி எழுச்சி பெற்றது! அவர்கள் நண்பர்கள் முன் எதிரணியினர் மேலும் கோல் அடிக்க விடாமல் செய்து! மூன்று கோல்கள் அசாத்தியமாக அடித்தனர். ஆனால் இறுதியில் 4-3 என்று தோல்வியை சந்தித்தாலும் அன்று மாணவர்கள் அனைவரும் மைதானத்தில் விளையாடிய மாணவர்களை பாராட்டினார்கள்.

அடுத்த ஒரு வாரம் கல்லூரி மாணவர்கள் அனைவரும் விளையாட்டு மாணவர்களை பற்றி தான் பேச்சு ஆனால் அவர்களின் பேச்சில் தோல்வி பற்றிய குறைகள் இல்லை வெற்றி விளிம்பின் சுவை தான் கூடி இருந்தது. மேலும் போட்டி ஆரம்பத்தில் இருந்து கை தட்டியிருந்தால் வெற்றி பெற்று இருப்போம் என்ற ஆதங்கம் வேறு உதித்திருந்தது. என் சக ஆசிரியர்களும் அந்த மாணவர்களை பாராட்டினர். இப்பொழுது எங்கள் டிபார்ட்மென்ட் ஆசிரியர்கள் எல்லாரும் நல்ல ஆசியர்களாய் மாறினோம். ஏனென்றால் அனைத்து ஆசிரியர்கள் இப்பொழுது உணர்ந்தோம் ஊக்குவித்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று.

செமஸ்டர் தேர்வு..

அனைத்து பாடங்களும் முன்னராகவே முடிக்கப்பட்டு படிப்பதிற்க்கென விடுமுறை விடப்பட்டது. எனக்கு என் ஆய்வு பணிக்கென நேரம் ஒதுக்கி பல கோப்புகள் சேர்த்து என் எச் ஓ டி யின் மேற்பார்வைக்காக காத்திருந்தேன். எல்லாமே சரியாகி போய்  தேர்வு நாளும் நெருங்கியது. வழக்கம் போல் நீ இத படிச்சியா? அத படிச்சியா? என ஒரே கேள்விகள் எங்கும் கேன்டீனில் மரத்துக்கடியில் என எதிரொலித்து கொண்டிருந்தது. ஒரு சில தேர்வறைகளில் அவ்வப்போது இஸ்க் என்றும் ஹே என்றும் கேட்க்கும் இதை கேட்டும் கேட்காமல் மேலயே பார்த்து கொண்டு நடந்து முடிந்தன செமஸ்டர் தேர்வுகள்.

விடுமுறைகள் முடிந்து மீண்டும் ஒரு செமஸ்டர்..

என் ஆய்வு முடியும் வரை இந்த கல்லூரியில் தான் நான்! எனக்கு பிடித்த என் நண்பர்களுக்கு வேறொரு பாடம் எடுக்க புது செமெஸ்டரின் முதல் நாள் அதே வகுப்பிற்குள். என்ன எல்லாரும் எப்படி விடுமுறைகளை கழித்தீர்கள் என்றேன். ஒவ்வொருவரும் ஒன்று மட்டும் கூறினர் எல்லாரும் நிறைய பொழுதுபோக்குகள்! நிறைய கிரிக்கெட்! நிறைய கால்பந்து! எல்லாம் ஒரு போட்டியின் முடிவின் ஆரம்பம்!!! என்று நினைத்துக் கொன்டேன்.

ஒரு காலத்தில் மாணவனாய்..

நானும் அவர்களை போல் தான் விளையாட்டில் கவனம்! கோப்பை வாங்குவதில் நோக்கம்! ஆனால் கோட்டைவிட்டது? படிப்பில் தான். விளையாட்டில் ஆர்வம் பெருகி கல்லூரிக்கு வருவதே விளையாட்டுதான் என்று பொழுதை கழித்த என்னை.. இப்போது நான் எப்படி மாணவர்களிடம் பழகினேனோ!! அது போல் என்னை சந்தித்த என் எச் ஓ டி ஒரு படி மேலே பழகி அவரை போல் ஒருவனாய் மாற்றி இன்று உங்கள் முன் கலை எனும் நான்.. கலை சார் ஆனேன்.

This is entry #137 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி/கல்லூரி நாட்கள்

எழுத்தாளர் - இரசல்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.