(Reading time: 15 - 30 minutes)

2017 போட்டி சிறுகதை 138 - நினைக்காத நாளில்லையே... - அம்ரித சாகரி

This is entry #138 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை – கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க

எழுத்தாளர் - அம்ரித சாகரி

Couples

ழைய மாணவர்கள் தினத்தை ஆர்ப்பாட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென ஒரு அமைதி... அந்த விசாலமான அறையின் வாசலின் நின்ற உருவத்தின் வசீகரமும், கம்பீரமும் அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது...

மெல்ல அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது...

"இது யாருன்னு தெரியலையா? எண்ணெய் வச்சு சப்புன்னு வாரின முடியோட, நீளமூக்கோட இருந்த அந்த சோடாபுட்டி விஷ்ணு தான”.

“ஆமாம்டா அவனேதான், ஆளே அடையாளம் தெரியாம மாறிவிட்டான்” என்று முதல் குரலுக்கு பதில் கூறியது இரண்டாம் குரல்.

“இவனை எப்படிடா உள்ளே விட்டாங்க?” என்றான் முதலாவதாக கூறியவன்.

“டேய், அவன் என்ன உன்னை மாதிரி சாதாரண ஆளுன்னு நினைச்சியா? தமிழ் நாட்டுல இருக்க விரல் விட்டு என்ன கூடிய டாப் 5 பிசினஸ் மேன்ல ஒருத்தன் டா” என்றான் புதியதாக ஒருவன். அவன் பிரமோத். விஷ்ணுவின் உயிர் நண்பன்.

அவன் குரலில் தான் எத்தனை பெருமை. இந்த மாதிரி ஒரு நல்ல நிலைமைக்கு வர 9 வருடங்களாக எவ்வளவு துன்பம் கொண்டிருப்பான்.  கண்கூடாக பார்த்தவன் இவன் தானே.

விஷ்ணுவின் பாதுகாப்பிற்கு என்று சில பேர் வந்திருந்தனர். அதனால் அவனை யாரினாலும் அவ்வளவு சீக்கிரத்தில் நெருங்க முடியவில்லை.

அவனைப்பற்றி தற்பொழுது தெரிந்த, அவனை முன்னுதாரணமாக கொண்டுள்ள ஒரு சிலர் அவனிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தனர். கையொப்பமிட்டு மேடையை நோக்கி  முன்னேறியவனின் விழிகள் தேடியது நண்பனையும் அவளையும்தான். நண்பனைக் கண்டவன் அவனை நோக்கி கையசைத்தான். பிரமோத் பதிலுக்கு கையசைக்க, மேலும் முன்னேறினான்.

“எப்படிடா இருக்க” என்று கேட்ட பிரமோத் அவனை அணைத்துக் கொண்டான்.

நண்பனின் அணைப்பில் இருந்தவனது கண்கள் லேசாக கலங்கியதோ?

வெளியில் காட்டிக் கொள்ளாமல் “நல்லா இருக்கேன்டா, நீ எப்படி இருக்க? ஆஷா, அத்வைத் எப்படி இருக்காங்க?” என்று கேட்டான்.

“நல்ல இருக்காங்கடா, ஆஷாவோட கவனிப்புல நானும் நல்லபடியா இருக்கேன்” என்று கூறிய பிரமோத், “சரி ஸ்டேஜ்க்கு போ, உனக்காக அங்க எல்லோரும் வெயிட் பண்ணுறாங்க”  என்று அவனை அனுப்பி வைத்தான். பிரமோத்தை விட்டு நகர்ந்தவனின் பார்வை அவனின் மனதிர்க்கினியவளை தேடியது. ‘அவள் இங்கு இல்லையோ, வருவாளா’ எதிர்ப்பார்த்தவன் நொடியில் கலங்கி ஏமாற்றம் அடைந்தான்.

விழிநீரும் வீணாக

இமைத்தாண்டக்

கூடாதென...

துளியாக

நான் சேர்த்தேன்...

கடலாகக்

கண்ணானதே...!

விஷ்ணுவின் பார்வையை பிரமோத் கீழே இருந்து கவனித்துகொண்டே இருந்தான். ‘சாரி விஷ்ணு அவள் வரமாட்டாள்’, என்று அவனின் விழி தேடிய கேள்விக்கு பிரமோத் மனதிற்குள்ளேயே பதிலளித்தான். வெளியில் சொல்ல அவனின் தைரியமும் இடம் தரவில்லை.

மேடையில் கல்லூரி முதல்வர், தாளாளர் ஆகியோருடன் இருந்த விஷ்ணு பிரமோத்திற்கு கைபேசியில் அழைப்பு விடுத்தான்.

“வைஷ்வதி எங்கடா?” என்று எடுத்தவுடன் கேள்வி கேட்பவனுக்கு உண்மையான பதில் சொல்ல முடியாமல்,  “தெரியலையே, இங்க தான் எங்கயாவது இருப்பா, ஆஷா வந்தாலாவது அவ கூட இருப்பா, இரு எங்கன்னு பார்த்து கூப்பிட்டு வரேன்” என்று பொய்யுரைத்தவன், லைனை கட் செய்து வெளியில் வந்தான். உள்ளே இருந்தவனோ அவள் வரவேண்டும் என்று நினைத்தான், வெளியில் இருந்தவனோ அவள் வர மாட்டாள் என்றான். ஆனால் இருவரின் உள்ளத்திலும் வைஷ்வதியின் நியாபகச்சுவடுகளே!

ஆழ்ந்த யோசனையுடன் அப்படியே கால் போன போக்கில் சிறிது தூரம் நடந்தவனின் பார்வையில் தூரத்தில் ஓடி வரும் ஆஷா தென்பட்டாள். அவளைக் கண்டு அதிர்ந்து  பிரமோத் அவளிடம் வேகமாக சென்றான்.

“நீ ஏன் இங்க வந்த ஆஷா? உன்னை விஷ்ணு பார்த்தா பெரிய பிரச்சனை ஆகிரும்” என்று கேள்வி கேட்டு கடிந்து கொண்டான் பிரமோத்.

“ப்ளீஸ் பிரமோத், பேச நேரமில்லை. ரொம்ப எமெர்ஜென்சி, அங்க அப்பா பேசினாங்க, வைஷ்வதிய காணோம், வாங்க போகலாம்” என்று அவனை கைப்பிடித்து பேசவிடாமல் பேசுவதற்கு இடம் தராமல் அழைத்து சென்று விட்டாள் ஆஷா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.