ரவியால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.ஏரியில் நிரம்பியிருக்கும் நீரைப் போல் அவன் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது.
சிறிது நேரத்தில் ஒரு மஞ்சள் நிறப் பையுடன் வந்து அதை அவனது கைகளில் திணித்து விட்டு,”என்னையும் அதில் பங்குதாரராய் சேர்த்துக் கொள்வாயா?” என கேட்டார்.
ரவிக்கு ஒன்றும் புரியவில்லை.அதை திறந்து பார்த்தபொழுது தேங்கியிருந்த நீர் கண்களில் இருந்து அவனையே அறியாமல் வழிய ஆரம்பித்திருந்தது.இந்த தடவை முத்துராஜை ரவி தழுவிக்கொண்டிருந்தான்.
எதிரே தன் நண்பன் சேகரைக் கண்டதும் வண்டியை ஒரமாய் நிப்பாட்டி விட்டு இருவரும் நடக்கலானார்கள்.
”சேகர் நான் சொன்ன வேலையை எல்லாம் முடித்து விட்டாயா?”
“முடித்துவிட்டேன் நண்பா.நீ கவலைப்படாதே.நாளை முக்கிய விருந்தினரை அழைத்து வருவது மட்டும்தான் உன் வேலை”.
நன்றி நண்பா.நீ இல்லை எனில் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது”
“அதேதான்டா ரவி நானும் கூற வந்தேன்.நீயே கூறி விட்டாய்” எனச் சொல்லி இருவரும் சிரித்து பேசிக்கொண்டே சென்றனர்.
அடுத்த நாள், மேளம் முழங்க, திருவிழா போல் கூட்டம் கூடியிருந்தது அந்த கட்டிடத்தின் முன்னால்.அப்படி என்ன அந்த கட்டிடத்தில் உள்ளது என நீங்கள் நினைப்பது புரிகிறது.ஆனால்,முக்கிய விருந்தினர் வரும் வரை பொறுத்துதானே ஆக வேண்டும்.
அதோ முக்கிய விருந்தினர் வந்தாகி விட்டது.”அப்பா! நம் கனவு நிறைவேறி விட்டது” என சொல்லிக்கொண்டே முக்கிய விருந்தினராகிய தன் அப்பாவின் கையில் தான் தொடங்கிய தொழிலின் ரிப்பனை வெட்டும் கத்திரியை கொடுத்து விட்டு ஆச்சரியத்திலிருந்து மீளாத தன் தாயிடம் ஆசி பெற்று விட்டு தன் வாயாடி தங்கையின் காதை கிள்ளி உன் அண்ணன் இனிமேல் எந்த இன்டெர்வியுவிற்க்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறினான்.
“முக்கிய விருந்தினர் அய்யா அவர்களே நேரம் தவரப்போகிறது.வந்து ரிப்பனை கத்தரியுங்கள்” என கூறிய சேகரிடம் “முக்கிய விருந்தினர் இல்லையடா,நான் இந்த தொழிலின் முக்கிய பங்குதாரர்” என முத்துராஜ் சொல்ல அனைவரின் சிரிப்பு சத்தத்தின் இடையே ரவியின் கனவு சத்தமின்றி நிறைவேறிய சந்தோஷத்தில் முத்துராஜ் அவனை பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
{kunena_discuss:785}