''ஆமா இங்கதான் பார்க்கிறேன் இவ்ளோ செடியும் காயும் ,அம்மாவுக்கும் ரொம்ப இஷ்டம் இதெல்லாம் வளர்க்க ,பட் அங்கே அவ்வளவா செழிப்பா வளர்ரதில்லை ,அதனாலே பூஞ்செடியோட நிறுத்திக்கிட்டாங்க ''
''உண்மைதான் அங்க வளர்க்க ரொம்ப பிரயத்தனப்படனும் ,ரொம்பவே மெனக்கிடனும் ,மண்ணு வளம் இல்லை ,இடமும் கம்மி ,இங்கு அதுதான் வித்யாசம் ,வசதியும் கூட ....சொல்ல மறந்துட்டேன் ,இந்த மணிக்கு கீரை பறிக்க வருவாங்க ,உள்ர ஏதும் வேலை கிடையாது ,வெளியோட முடிஞ்சிடும் ...
இவங்க இங்க கீரை பறிச்சு உடனுக்குடன் தேவைக்கு கொடுத்து கொஞ்சம் அவங்க தேவையை பூர்த்தி பண்ணிக்க இந்த ஏற்பாடு ,
வருவாங்கன்னு சொல்ல மறந்துட்டேன் ,உங்களுக்கு இதில் ஒன்னும் இடைஞ்சல் இல்லியே ''என்று அவர்கள் கேட்டதையே இவர்களும் விளக்கமாய் கேட்க ,
''ஒன்னும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன சிரிப்புடன் பண்ணையாரை பார்த்துக் கொண்டு முடிக்க
அவர் ஒரு சின்ன புன்னகையுடன் சாப்பிட ஆரம்பித்தார் !
கிராமமும் அதன் கட்டமைப்பும் ,மனிதர்களும் என்று தான் மனதில் வரைந்திருந்த காட்சியில் இருந்து இந்த குடும்பமும் அதன் நபர்களும் வேறுபடுகிறார்கள் என்பதை வியப்புடன் பார்த்தாள் .