“எதுவும் வேண்டாம்மா..,யாருக்கவது போன் பண்ணி சீக்கிரம் வர சொல்லுறியா..,ஆமாம் நீ யாருமா..”என்றுக் கேட்க
“நான் அஸ்வினோட வைப்..,உங்களுக்கு அஸ்வின தெரியும் தான..”என்றுக் கேட்க
“தெரியும்மா..,அவனுக்காவது போன் பண்ணி வர சொல்லேன்மா..”என்று அவர் சொல்ல
“சரிங்க சார்..”என்று அவள் கூறியவள் அஸ்வினிற்கு அழைத்தாள்.
அவளின் அழைப்பை அவன் ஏற்ற உடன்
” என்ன கவி காலேஜ் விட்டு வந்துடியா..,என்ன வீட்டுல யாரும் இல்லாததால போர் அடிக்குதா..,என்னாலையும் இப்ப வர முடியாதும்மா..,எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்குமா..,பத்திரமா இரு..” என்று அவள் கேட்பாள் என்று நினைத்து அவன் அனைத்தையும் தானே கூறினான்.அவனுக்கு நேரம் இல்லை,ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பதால் அதற்கு தயாராகிக் கொண்டிருந்தான் அஸ்வின்.
“மாமா..,நான் உங்க கிட்ட பேசணும்.”அவளது மாமா என்ற அழைப்பிலே அவளது அருகில் யாரோ இருக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டான், ஏனென்றால் அவள் எப்பொழுதும் அவனை அஷு மாமா என்று தான் அழைப்பாள்.
“சொல்லு கவி,யாரு பக்கதில் இருக்கா..”என்று அவன் கேட்க
“உங்களை பார்க்க ஒருத்தங்க வந்திருகாங்க மாமா...”என்று அவள் கூற
“யாருமா..,அவங்க பேரு என்னன்னு கேட்டு சொல்லு..”என்று அவன் கூற
அந்த நடுத்தர வயது மனிதனிடம் சென்றவள் “சார் உங்க பேர் என்ன..,மாமா கேக்குறாங்க..”என்று அவள் கூற
“யாருமா..,அஸ்வினா...”என்றுக் கேட்டவர் அவள் ஆமாம் என்று தலை அசைக்கவும் குடும்மா நான் பேசுறேன் என்று மொபைலை வாங்கினார்.
அவர்களது சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த அஸ்வின் அது யாராக இருக்கும் என்று யோசிக்க
“ஹ....ஹலோ..,அச...அஸ்வின்..,நான்...,உன்னோட..க...க....கண்ணு.மாமா..டா....”என்று அவர் கூறிய அடுத்த நொடி அங்கே இணைப்பு துண்டிக்க பட்டது.
அடுத்த அரைமணி நேரத்தில் அஸ்வின் மட்டும் இல்லை மொத்த குடும்பமே அங்கு இருந்தது.
யார் அந்த நடுத்தர வயது மனிதர்..?அவருடன் வந்த அந்த இருவர் யார்..இவர்களால் கவி-அஸ்வின் வாழ்வில் நிகழ போவது என்ன...
தொடரும்
{kunena_discuss:1099}