மனதில் பரவிய அந்த இதத்துடன் வேறு உடை மாற்றி ,ஹெட்மாஸ்ட்டரையும் ,பண்ணையாரையும் ஒருங்கே காண தயாராகி சென்றாள் .
அவள் சென்ற நேரம் அங்கே முதல் நாள் போல ,மதுமா அந்த ஊஞ்சலில் உட்கார்ந்திருக்க ,மடியில் அந்த குட்டி நாய் !
இவளை பார்த்தவுடன் , இப்போது பார்த்து பழகிய உற்சாகத்துடன்
'' வாங்க இப்படி வந்து உட்காருங்க ''என்று ஊஞ்சலில் கொஞ்சம் ஒதுங்கி இடம் கொடுக்க
சுற்றி எங்கயும் வேறு யாரும் தென்படவில்லை என்பதால் ,இவளும் அருகே சென்று அமர்ந்தாள் .
லேசான உந்துதலில் ஊஞ்சல் சொகுசாக ஆட
''எப்படி இருந்தது முதல் நாள் ,மகர் கிட்ட மாட்டினீங்களா ,செம்ம ரம்பமா ,என்ன செய்ய லைக் டாடி ,லைக் சன்''என லேசாய் மது கண் சிமிட்ட
இவள் அயர்ந்து போனாள் !
இதை எப்படி எடுத்துக்கொள்வது ,இவர் கிண்
...
This story is now available on Chillzee KiMo.
...
''காம்பௌண்ட் ன்னு ஒன்னு கட்டினா ,அப்புறம் அந்த இடம் பாதுகாப்பா ஆயிடும் ,சிறு தோட்டம் போடலாம் ,பசங்களிடையே அந்த ஆர்வத்தை கொண்டு வருவது நல்லதுன்னு எனக்கு ரொம்பா நாளா தோணும் ,''
இப்போது மின்னல் பண்ணையார் கண்களுக்கு இடம்பெயர ,அவர் தமிழ் போல் அல்லாமல் வெளிப்படையாகவே பாராட்டினார் !