முதலில் முகிலன் தயாராகிவிட்டான். அவன் நிற்கிறான் என்றதும் அவள் தயங்கி நின்றாள்.
அதனால் அவன் அறையை விட்டு வெளியேறிவிட்டான்.
குழந்தைக்கு அழகான பட்டுப்பாவாடை சட்டையை அணிவித்துவிட்டு வெளியில் அனுப்பி வைத்தவள் தான் என்ன அணியலாம் என்று பார்த்தாள்.
ஓரளவுக்கு அவளிடம் இருந்தது எல்லாம் நல்ல துணிமணிகள்தான். கணவன் வெளிநாட்டில் இருக்கிறான் என்று சொல்லி வைத்ததால் அவனை எப்போதுமே காந்திமதி துணிகளை நல்லதாகத்தான் பார்த்து எடுக்கச் சொல்வார்.
அவள் தயாராகி வந்த உடனே வள்ளியம்மை மகளுக்கென்று செய்து வைத்திருந்ததை கொண்டு வந்து கொடுத்தார்.
விடைபெற்றுக்கொண்டு காரில் கிளம்பினர். காரை முகிலனே ஓட்டினான். அவனருகே அமர்ந்துகொண்ட பூமிகா அவனிடம் கண்ணில் படுவதை பற்றி எல்லாம் கேட்டுக்கொண்டே வந்தாள். அவனும் பொறுமை
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு திருமணப் பரிசை நித்திலாவின் மாமியார் தந்தார்.
விடைபெற்றுக்கிளம்பினர்.
அப்போது வள்ளியம்மை போன் செய்தார்.
பேசிவிட்டு “சரிம்மா” என்று வைத்துவிட்டான்.
திரும்பவும் வீடு செல்லும் வழியில் செல்லாமல் அவன் வேறு பாதையில் செலுத்தவும் அவள் அவனைத்திரும்பிப் பார்த்தாள்.