அதைக் கண்டதுமே மறைமுகமாக அவன் அளித்த சம்மதம் புரிந்து வனிதாமணியும் யுகேந்திரனும் கண் ஜாடையால் தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
அதைக் கண்டதும் அவள் பல்லைக் கடித்தாள்.
“ஆன்ட்டி. இப்படி கண்டவங்களையும் நம்ம வீட்டில் வந்து தங்க சொல்றது அவ்வளவா எனக்கு சரியா தோணலை.”
தன்னிடம் அவர்கள் என்னவோ ஆலோசனைக் கேட்டதாக எண்ணிக்கொண்டு அவளே பதில் சொல்ல யுகேந்திரன் பல்லைக் கடித்தான்.
அதற்கு மேலும் அவனால் அறைக்குள்ளே நிற்க முடியவில்லை. வெளியே வந்து முறைத்தான்.
“கிருஷ்ணா என்னோட ஃப்ரண்ட். அதுவும் பேயிங் கெஸ்டாதான் எங்க வீட்டில் தங்கறதுக்காக அழைச்சுட்டு வருவதற்கு நான் அனுமதி கேட்கறேன்.”
நம்ம வீடு என்று சொன்னதற்காக தான் திருப்பிக்கொடுக்கிறான் என்று புரிந்தது. அதைப் புரியாமல் போனால் அவள் சா
...
This story is now available on Chillzee KiMo.
...
‘அது சரி. நீ நினைத்தது நடக்கிற வரையில் அவனைக் கவனிச்சுதானே ஆகனும்.’
மனதிற்குள்ளேயே கருவிக்கொண்டாள்.
“இன்னிக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சுடுச்சும்மா. அதான் சீக்கிரம் வந்துட்டேன். ஆமா. யுகேன். என்ன வீட்டையே தலைகீழா புரட்டிப்போட்டிருக்கே? இந்த மாதிரி வேலை எல்லாம் நீ செய்ய மாட்டியே?”