அவன் கேட்க நினைத்ததை தந்தை கேட்டதும் தாய் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் கவனிக்க ஆரம்பித்தான்.
“பின்னாடி நீச்சல் குளத்தருகே இருக்காங்க.”
சிரித்தவாறே சொல்லிக்கொண்டு தனது வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.
இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்ற எரிச்சலுடன் தனது அறைக்குச் சென்றான். உடை மாற்றி கீழே சென்றான்.
வந்த அன்றே அவனைக் கூத்தடிக்க நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டாளா? இந்த அம்மா அதை பெருமையாக வேறு சொல்லிக்கொள்கிறார்களே?
அவனுக்குக் கோபமாக வந்தது. மனம் கேட்காமல் நீச்சல் குளத்திற்கு சென்றான்.
அங்கே குளத்தில் யாரையும் காணவில்லை.
மனம் சற்றே ஆறுதலடைந்தது.
ஆனால் அம்மா அவர்கள் அங்கேதானே நிற்பதாக கூறினார்கள்.
அவனது கேள்விக்கு விடையாக கிருஷ்வேணிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ு குடும்பத்தாரைப் பற்றிய நினைவுகள் கலங்களாகத்தான் தெரிகின்றது. இப்போது கூட இருக்கும் உறவினர்களோ அவளிடம் உண்மையான பாசம் வைத்தவர்கள் கிடையாது. அவளுக்கு என்னவானாலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும்.
அவள் உண்மையான பாசத்திற்காக ஏங்கும்போதுதான் யுகேந்திரனின் நட்பு கிடைத்தது.