அவனுக்கு அவளிடம் இருந்து வேறு எதுவும் தேவை இருக்கவில்லை. அவனுக்கும் உண்மையான அன்புதான் தேவையாய் இருந்தது.
படிப்பை முடிக்கப் போகும் இந்த ஒரு வருடத்திற்குள்ளாவது தான் ஒரு சந்தோசமான சூழ்நிலையில் இருந்தாக வேண்டும்.
அப்போதுதான் படிப்பை முடித்த பிறகு தான் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளை சந்திக்கும் வலு கிடைக்கும்.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
அவளுக்கு பெரும்பாலும் அழுவது பிடிக்காது. ஆனால் சில நேரங்களில் அளவுக்கு அதிகமான அன்பைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
“என்னம்மா கிருஷ்ணா? உனக்கு இங்கே பிடிச்சிருக்கா?”
“ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.”
“ஆமா. இப்ப உள்ள பிள்ளைங்க எல்லாம் ஆன்ட்டி அங்கிள்னு கூப்பிடறதைதான் பெருமையா நினைக்கிறாங்க. நீ என்னன்னா அத்தை மாமான்னு கூப்பிடறே?” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/10992-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-02">Episode # 02
{kunena_discuss:1182}